கண்ணுக்குத் தெரித, இன்னமும் கட்டுப்படுத்த முடித கொவிட்-19 தொற்று ஏற்படுத்திய ஏராளமான பாதிப்புகளில் இன எதிர்ப்பும் ஒன்று. கொரோனா கிருமி ஒரு குறிப்பிட்ட இனத்தவர், நாட்டினர் மூலம் பரவுகிறது என்ற ஒரு தவறான அச்ச உணர்வையும் அது கிளப்பிவிட்டுள்ளது.
உலகம் முழுவதுமே மில்லியன் கணக்கான மக்கள் வேலைகளை இழந்ததால் முதலுக்கே மோசம் ஏற்படுவதாக பலருக்கும் பயம் வந்து அதன் காரணமாக வெளிநாட்டினருக்கு எதிரான மனப்போக்கு உலகம் முழுவதிலும் பல இடங்களில் வெளிப்பட்டதை பார்த்து இருக்கிறோம்.
சில நாடுகளில் ஆசிய நாட்டவர்கள் வன்செயல்களுக்கு இலக்கானார்கள் என்றெல்லாம் முன்பு செய்திகள் வெளியின. கண்டபடி திட்டுவது, அலைக்கழிப்பது, தாக்குவது அவமானப்படுத்துவது போன்ற பல வழிகளிலும் ஆசிய நாட்டவரை சிலர் வெறுத்து ஒதுக்கியது உண்டு.
இந்த நேரத்தில் சில ஆய்வுகளைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆசிய மக்களை வெறுத்து அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றச்செயல்கள் 2020 முதல் காலாண்டில் இருந்ததைவிட இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 169% அதிகமாகிவிட்டதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேபால், மூன்று பேரில் ஒருவர் ராவது நம்மைத் தாக்கக்கூடும், மிரட்டக்கூடும் என்று அஞ்சுவதாக அண்மையில் வெளின பியூ (Pew) என்ற ஆய்வு கண்டறிந்தது.
வெளிநாடுகளில் இருக்கும் சிங்கப்பூரர்களும் இதில் இருந்து தப்பவில்லை. லண்டன் நகரில் சட்டம் படிக்கும் சிங்கப்பூரர் சென்ற ஆண்டில் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம். அத்தகைய இனவாதச் செயல்களை கேட்டறிந்த சிங்கப்பூரர்கள் திடுக்கிட்டுப்போனார்கள்.
அவர்கள் மேலும் அச்சமடையும், வியப்படையும், சங்கடமடையும் அளவுக்கு சிங்கப்பூரிலேயே அத்தகைய சம்பவம் இப்போது நிகழ்ந்து இருப்பதுதான் மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளது.
இனவாதத் தாக்குதல் நடந்துள்ளதாக சில நாட்களுக்கு முன்னதாக ஒரு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்திய சிங்கப்பூரரான ஒரு மாது சரிக முகக்கவசம் அணிமல் வேகநடை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ரோ ஒருவர் அவரை நோக்கி சத்தம் போட்டு கடைசியில் அந்த மாதைத் தாக்கிவிட்டார். தான் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதாக அந்த மாது விளக்கம் அளித்தும் அது எடுபடவில்லை.
இது ஒருபுறம் இருக்க, கொரோனா தொற்றைப் பரப்புவதாகக் கூறி வெளிநாட்டு இந்தியக் குடும்பம் ஒன்றை நோக்கி ஒருவர் சத்தம்போட்ட சம்பவமும் இங்கு நிகழ்ந்து உள்ளது.
சிங்கப்பூரில் எந்த ஒரு நிலையிலும் இத்தகைய இனவாதப் போக்குக்கும் வன்செயல்களுக்கும் இடமே கிடைது என்பது திட்டவட்டமான ஒன்று. வேலை போய்விடும் என்ற பயம் உள்ளிட்ட எதுவுமே இத்தகைய இன வெறுப்புச் செயல்களை நியப்படுத்திவிட முடிது.
ஒவ்வொரு சமூகத்திலுமே இன உணர்வு என்பது இருக்கத்தான் செய்யும். இதற்கு சிங்கப்பூரும் விதிவிலக்கு அல்ல. ஆனால் வெளிநாட்டினரை, வெளிநாட்டுக் கலாசாரங்களை வெறுப்பது, இன வாதப் போக்கு ஆகியவை இங்கு வேர் ஊன்றி வளர ஒருக்காலும் அனுமதிக்க முடிது.
சிங்கப்பூர் பல இன, பல கலாசார நாடு. இதை உணர்ந்தவர்கள் சிங்கப்பூர் மக்கள். இதனால்தான் அண்மைய இனவாதச் சம்பவங்கள் இங்குள்ள பெரும்பாலான மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பவைக இல்லை. இன வெறுப்பு பேச்சு, இனவாத குற்றச்செயல்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் இங்கு கடுமைன சட்டங்கள் நடப்பில் உள்ளன.
இதைப் பொறுத்தவரை சட்டதிட்டங்களுக்கு மேலும் குடிமக்களுக்கும் சமூகத்துக்கும் இதர தலைவர்களுக்கும் முக்கியமான ஒரு பொறுப்பு இருக்கிறது. இத்தகைய சம்பவம் நிகழும்போது அதை அவர்கள் கடுமைகக் கண்டிக்க வேண்டும். மேலும் அவை நிகழாதிருக்க வழி காணவேண்டும்.
மின்னிலக்கமயமான இப்போதைய காலத்தில் தனிப்பட்டவர்களும் குழுவினரும் உணர்வுபூர்வமான அம்சங்களைப் பற்றிய கருத்துகளை, எண்ணங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். இவையும் கவனிக்கப்பட வேண்டியவை என்பதைக் குடிமக்களும் சமூகமும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பல இனத்தன்மை அடிப்படையில் உருவான நாடு சிங்கப்பூர். இது நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நன்கு பதிந்திருக்கும் ஒன்று. இனம், மொழி, சமயம் எப்படி இருந்தாலும் நாம் எல்லாரும் ஐக்கியமான ஒரே மக்கள் என்று தேசிய பற்றுறுதி பறைசாற்றுகிறது.
உண்மை நிலவரம் இப்படி இருக்க, இனவாதப் போக்கை கையில் எடுத்து அதன் அடிப்படையில் ரைவது குற்றம் சொல்லும் அணுகுமுறையைக் கைகொள்வோமேனால் அது ஏற்றுக்கொள்ள முடித கருத்துகளும் செயல்களும் வழக்கமாக ஆகிவிடக்கூடிய ஒரு பாதையில் நம்மைச் சறுக்கி விழ வைத்து அதலபாதாளத்தில் நம்மைத் தள்ளிவிடும் என்பதை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது.
முதலில் குறிப்பிட்ட வெளிநாட்டினர் சிலரை இலக்காக வைத்து இடம்பெறக்கூடிய இத்தகைய வெறுப்புச் செயல்கள், இங்கு வசிக்கும் எல்லா சிறுபான்மை மக்களையும் பல நாட்டினரையும் நோக்கித் திரும்பாது என்று திட்டவட்டமாகச் சொல்லி விட முடிது.
கொவிட்-19 தொற்று கற்பனைக்கு எட்டாத அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது, ஏற்படுத்தி வருவது உண்மைதான். இந்தச் சூழலில் சிங்கப்பூரில் வசிக்கும் எல்லா இன, சமய மக்களுக்கும் முன்பைவிட அதிகமான மிக முக்கிய பொறுப்பு இருக்கிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் நல்லபடி கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த மனப்போக்கை பொதுமக்களிடம் மேம்படுத்துவதற்கான பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது.
உண்மை, பொய் என்பது தெரிமல் புரளிகளைக் கிளப்பிவிடும் செய்கைகளில் ரும் ஈடுபடக்கூடாது. இனவாத காரியமோ, பாரபட்சமான நடத்தைகளோ இடம்பெறுமானால் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடிகத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பும் மக்களுக்கு இருக்கிறது.
பல இன, பல சமய, பல மொழி மக்களும் ஒற்றுமைகச் செயல்பட்டு ஒருவருக்கொருவர் உதவி, ஒரே மக்களாக, ஒரே நாடாக தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் சிங்கப்பூரின் உத்தி தொடருமானால் கொவிட்-19 உள்ளிட்ட எந்தவொரு சவாலையும் வெற்றிகரமான முறையில் சமாளித்து பெரும் பலத்துடன் நாம் மீண்டுவிடலாம்.
முரசொலி

