பாலர்பள்ளிகள், கைக்குழந்தைகள் சிறுவர் ஆரம்பகால பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்குள்ளே வரும் ஜுன் 13ம் தேதி வரை வெளிநபர்கள் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள். புதிதாக சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் உட்பட எல்லா பெற்றோரும் இதில் அடங்குவார்கள்.
கொவிட்-19 பரவலின் தொடர்பில் பாலர்பள்ளிகளிலும் ஆரம்பகால பராமரிப்பு நிலையங்களிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடப்புக்கு வரும் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு நேற்று அதன் அறிக்கையில் கூறியது.
பெற்றோருடனான சந்திப்புகளை இணையம் வழியாக நடத்தும்படி அமைப்பு பாலர் பள்ளிகளை அறிவுறுத்தியது. சிலருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அவசரமாக பழுதுபார்த்தல் போன்ற வேலை களுக்கும் உரிமம், கணக்காய்வு தொடர்பான அவசியமான பணி களுக்கு மட்டும் ஆட்கள் நிலையங்களுக்குள்ளும் பள்ளிகளுக்குள்ளும் அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல செறிவூட்டல், மொழி வளர்ச்சி உள்ளிட்ட துணைப்பாட வகுப்புகளை நடத்துபவர்கள் இக்காலகட்டத்தில் ஒரு பள்ளிக்கு மட்டும்தான் நேரடியாக சென்று பாடம் நடத்த முடியும். பாலர் பள்ளிகளுக்கு இடையே கிருமிப் பரவலைத் தடுப்பது அதன் நோக்கம்.
சிறப்புத் தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு பயிற்றுவிப்பவர்கள் மட்டும் 4 பள்ளிகளுக்குச் சென்று வகுப்புகள் நடத்தலாம்.
அதே வேளையில் பாலர்பள்ளிகளில் அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் பெரிய அளவிலான நடவடிக்கைகளும் வெளி இடங் களுக்கான பயணங்களும் நடைபெறாது.
பிள்ளைகளை வெளிப்புற நடவடிக்கைகளுக்கு அழைத்துச் செல்லும்போது, ஒரு குழுவில் இனி இரண்டு பாலர்கள் மட்டுமே இருக்கலாம். முன்னதாக ஒரு குழுவில் 5 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், பாலர் பள்ளிகள், ஆரம்பகால பராமரிப்பு நிலையங்களில் உள்ள எல்லா ஊழியர்களும் இனி முகக்கவசங்களைக் கட்டாயமாக அணிய வேண்டும். முகக்கவசம் இன்றி முகக்காப்பு அணிய அனுமதி இல்லை.
ஊழியர்களுக்கும் குழந்தைகளுக்கும் கூடுதலாக, தினமும் மூன்று முறை வரை உடல்வெப்பச் சோதனைகள் நடத்தப்படலாம்.
பணிமனைச் சந்திப்புகளும் பயிற்சிகளும் இணையம் வழியாக நடைபெறும்.
ஜுன் 13 வரை இந்தக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும்.