சமூகத்தில் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்துப் பொது நூலகங் களும் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் நூலகத்தில் செலவிடக்கூடிய நேரமும் குறைக்கப்படுகிறது.
தேசிய நூலகம், சிங்கப்பூர் தேசிய காப்பகம், தேசிய நூலகக் கட்டடத்தின் 5வது தளத்தில் உள்ள படிக்கும் இடம் ஆகியவற்றில் ஒருவர் இருக்கக்கூடிய நேரம் இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது. மற்ற நூலகங்களில் ஒரு மணி நேரமே இருக்க முடியும்.
நூலகத்திற்குச் செல்ல https://www.nlb.gov.sg/Visit/GettingOriented/PlanYourVisit.aspx என்ற இணையப் பக்கத்தில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளவும்.
அத்துடன் மே 16 முதல் ஜூலை 31 வரை நூலகங்களில் இரவல் பெறும் நூல்கள், பொருட்களுக்கான இரவல் காலம் மூன்று வாரத்திலிருந்து ஆறு வாரமாக நீட்டிக்கப்படுகிறது.
ஏற்கெனவே இரவல் பெற்ற பொருட்களுக்கும் கூடுதல் காலம் கிடைக்கும். மேல் விவரங்களை நூலகத்தின் இணையப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

