பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ளாமல் இருந்த 70 பேர் மீது விசாரணை நடத்தவுள்ளனர்.
15 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட 47 ஆண்ளும் 23 பெண்களும் வெவ்வேறு நேரங்களில் பெரிய குழுக்களாக குடித்துவிட்டு சத்தமாகப் பாடியதாக போலிசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மே 7ஆம் தேதியன்று, காக்கி புக்கிட் ரோட்டிலுள்ள வர்த்தக கட்டடத்தில் தகராறு நடந்ததாக புகாரின்போரில் போலிசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றனர். அப்போது அருகிலிருந்து சத்தமான இசையைக் கேட்ட அதிகாரிகள், அந்த நபர்களைக் கைது செய்தனர்.

