கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வியாபாரம் செய்ய ஏற்படும் செலவு களை ஈடுசெய்ய உணவு, பானம் மற்றும் சில்லறை வர்த்தகங்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, மேலும் பல வர்த்தகங்கள் மின்னிலக்க
அணுகுமுறையைப் பயன்படுத்த இருக்கின்றன. உணவு விநியோகச் செலவுகளின் ஒரு பகுதியை ஈடுசெய்ய திட்டம் ஒன்றும் இணையம் மூலம் வர்த்தகம் செய்ய சில்லறை வர்த்தகர்களுக்கு உதவும் திட்டம் ஒன்றும் நேற்று மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
"கொவிட்-19 சூழல் காரண
மாகப் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தங்களுக்கு இந்தத் திட்டங்கள் உதவிக்கரம் நீட்டும்.
"இணையம் மூலம் வர்த்தகம் செய்து வருமானம் ஈட்டவும் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்யவும் திட்டங்கள் துணை புரியும்," என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு கூறியது.
'டிலிவரூ', 'ஃபுட்பேண்டா', 'கிராப்ஃபுட்' ஆகிய மூன்று உணவு விநியோகச் சேவைகள் வசூலிக்கும் தரகுக் கட்டணங்களில் ஐந்து விழுக்காட்டுத் தொகையை இத்திட்டங்கள் வழங்கும்.
நேற்றிலிருந்து ஜூன் மாதம் 15ஆம் தேதி வரையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.
இந்த நிதியுதவிக்குத் தகுதிபெற அங்கேயே உடனடியாக உட்கொள்ள தயாரிக்கப்படும் உணவுவகைகளை கடைகள் விற்க வேண்டும். தின்பண்டங்கள், பனிக்கூழ் போன்ற முன்கூட்டியே பொட்டலம் கட்டப்பட்ட உணவுவகைகளை மட்டுமே விற்கும் கடைகளுக்கு நிதியுதவி கிடைக் காது. திட்டத்தில் பங்கெடுக்க தகுதிபெறும் வர்த்தகங்கள், மேல் குறிப்பிடப்பட்ட மூன்று உணவு விநியோகச் சேவைகளைப் பயன்படுத்தினால் தரகுகளால் ஏற்படும் செலவுகள் தானாகவே குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல வர்த்தகர்கள் இணையம் வழி வர்த்தகத்தில் காலூன்ற ஷாப்பீ போன்ற முன்னணி மின்வர்த்தகத் தளங்
களுடன் திட்டம் இணைந்து செயல்படும்.
இந்தத் தளங்கள் வசூலிக்கும் சேவைக் கட்டணங்களை ஈடுசெய்ய தகுதிபெறும் வர்த்தங்களுக்கு உதவியாக ஒருமுறை வழங்கப்படும் $8,000 வரம்புடன் சேவைக் கட்டணங்களில் 80 விழுக்காடு ஆதரவு கிடைக்கும்
இந்தத் திட்டத்தில் பங்கெடுக்க விரும்பும் வர்த்தகங்கள் நேற்றிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மின்வர்த்தகத் தளங்களில் ஏதேனும் ஒரு தளத்துடன் நேரடியாக பதிவு செய்துகொள்ளலாம்.
இதற்கிடையே, நேற்று முதல் ஜூன் 13ஆம் தேதி வரை தனது சேவையைப் பயன்படுத்தும் தேசிய சுற்றுப்புற வாரியத்தால் நிர்வகிக்கப்படும் உணவு அங்காடி நிலையங்களில் உள்ள கடைகள் தரகு செலுத்தத் தேவையில்லை என்று கிராப் நிறுவனம் அறிவித்துள்ளது.
திட்டம் வழங்கும் ஐந்து விழுக்காடு நிதியுதவியை கழித்துவிட்டு மீதமுள்ள செலவை கிராப் ஏற்கும். இந்நிலையில், இந்தத்
திட்டங்களுக்கு உணவு, பானக் கடைக்காரர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

