டாக்சிகளிலும் தனியார் வாடகை கார்களிலும் இரண்டுக்கும் மேற்பட்ட பயணிகள் ஒன்றாகப் பயணம் செய்யலாம்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்
களாக இருக்க வேண்டும்.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நேற்று முதல் ஜூன் 13 வரை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று நிலப் போக்கு
வரத்து ஆணையம் கூறியது.
பயணம் செய்யும்போது குடும்பங்களிடையே கொவிட்-19 கிருமி பரவுவதைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.
புதிய கட்டுப்பாட்டின்கீழ் டாக்சி அல்லது தனியார் வாடகை கார்களில் ஒன்றாகப் பயணம் செய்பவர்கள் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதிகபட்சம் இருவர் மட்டுமே பயணம் செய்யலாம்.
இந்நிலையில்ல், டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களும் பயணி களும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று ஆணையம் நினைவூட்டியது.
"முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் சேவை வழங்கக்கூடாது," என்று அது கூறியது.
வர்த்தக ரீதியான கார் பகிர்வுச் சேவைகள் நிறுத்தப்படும். இதை மீறி சட்டவிரோத கார் பகிர்வுச் சேவைகளை வழங்குவோர் தொடர்பான தகவலை OneMotoring இணையப்பக்கம் மூலம் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

