வெளிநாட்டு ஊழியர்கள் கூடும் இடங்களில் குறைவான மக்கள் நடமாட்டம்

வெளிநாட்டு ஊழியர்கள் கூடும் இடங்களில் குறைவான மக்கள் நடமாட்டம்

1 mins read
373d385c-7afb-42ba-8562-f4872c621d24
லிட்டில் இந்தியாவில் நேற்று மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

நேற்று புதிய நடை­மு­றை­கள் தொடங்­கின.

இந்­நி­லை­யில், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வழக்­க­மாக ஒன்­று­கூ­டும் இடங்­களில் நேற்று மக்­கள் நட­மாட்­டம் குறை­வாக இருந்­தது.

நேற்று நண்­ப­கல் நேரத்­தில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­

யா­ளர்­கள் லிட்­டில் இந்­தி­யா­வுக்­குச் சென்­றி­ருந்­த­போது கடை­கள் திறந்­தி­ருந்­த­போ­தி­லும் வழக்­க­மாக இருக்­கும் கூட்­டம் இல்லை.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அங்கு தனித்­த­னி­யாக சென்­று­கொண்­டி­ருந்­ததை செய்­தி­யா­ளர்­கள் கவ­னித்­த­னர்.

உண­வுப் பொருட்­கள், அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் ஆகி­ய­வற்றை வாங்க அவர்­கள் அங்கு சென்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கூடுமான வரையில் தங்கு விடுதிகளைவிட்டு வெளியேற வேண்டாம் என தங்கள் முதலாளிகள் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.