ஒன்றுகூடி, மது அருந்தி, பாட்டுப் பாடி கும்மாளம்: விதிமீறியதாக 70 பேரிடம் போலிஸ் விசாரணை

ஒன்றுகூடி, மது அருந்தி, பாட்டுப் பாடி கும்மாளம்: விதிமீறியதாக 70 பேரிடம் போலிஸ் விசாரணை

2 mins read
856aabd4-21be-4faa-a78e-6fa5c2eada5d
-

பாது­காப்பு இடை­வெளி விதிமுறை­களுக்கு இணங்கி நடக்­கா­த­தற்­காக 70 பேரை போலிஸ் விசா­ரித்து வரு­கிறது.

அவர்­களில் 47 ஆண்­களும் 23 பெண்­களும் அடங்­கு­வர். இம்­மா­தம் இடம்­பெற்ற வெவ்­வேறு சம்­ப­வங்­களில், 15-16 வய­துக்­குட்­பட்ட அவர்­கள் பெரிய அள­வி­லான குழுக்­க­ளாக இணைந்து குடித்­தும் பாட்­டுப் பாடி­யும் கும்­மா­ளம் அடித்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இம்­மா­தம் 7ஆம் தேதி காக்கி புக்­கிட் சாலை­யில் உள்ள ஒரு தொழி­ல­கக் கட்­ட­டத்­தில் இடம்­பெற்ற சச்­ச­ரவு தொடர்­பில் விசா­ரித்­துக்­கொண்டு இருந்­த­போது, அங்­குள்ள இன்­னொரு கட்­ட­டத்­தில் இருந்து பெரும் சத்­தம் வந்­தது போலி­சார் காதில் விழுந்­தது.

அதைத் தொடர்ந்து, அங்கு சென்று பார்த்­த­போது, உள்ளே 20 முதல் 42 வய­துக்­குட்­பட்ட ஆண்­கள் ஒன்­பது பேரும் பெண்­கள் அறு­வ­ரும் குடித்­துக்­கொண்­டும் பாடிக்­கொண்­டும் இருந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

அதே நாளில், கிரீன்­வுட் அவென்­யூ­விலுள்ள ஒரு குடி­யி­ருப்­பில் ஒன்­று­கூ­டல் இடம்­பெ­று­வ­தாக போலி­சுக்­குத் தக­வல் கிடைத்­தது.

அதைத் தொடர்ந்து அதி­கா­ரி­கள் அக்­கு­டி­யி­ருப்­புக்­குச் சென்று பார்த்­த­போது, 15 முதல் 41 வய­துக்­குட்­பட்ட ஆண்­கள் 19 பேரும் பெண்­கள் பத்­துப் பேரும் ஒன்­றா­கக் கூடி, குடித்து, கும்­மா­ள­மிட்­ட­படி இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அங்­கி­ருந்த 23 வயது ஆட­வர் ஒரு­வர் வேண்­டு­மென்றே போலிஸ் அதி­கா­ரி­க­ளைத் திரும்­பத் திரும்ப தகாத சொற்­க­ளால் பழித்­த­தா­கச் சொல்­லப்­பட்­டது. அதை­ய­டுத்து, அர­சாங்க அதி­கா­ரியை நோக்கி இழி­சொற்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­காக அச்­சு­றுத்­த­லில் இருந்து பாது­காக்­கும் சட்­டத்­தின்­கீழ் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

அக்­கு­டி­யி­ருப்­பில் இருந்த 40 வயது ஆட­வர் ஒரு­வர் போதைப்­பொ­ருள் வைத்­தி­ருந்­த­தாக நம்­பப்­படு­கிறது. அதைத் தொடர்ந்து, போதைப்­பொ­ருள்­க­ளின் தவ­றான பயன்­பாட்­டுக்­கான சட்­டத்­தின்­கீழ் அவ­ரை­யும் போலி­சார் கைது செய்­த­னர்.

கடந்த 14ஆம் தேதி நிகழ்ந்த இன்­னொரு சம்­ப­வத்­தில், ஜாலான் புக்­கிட் மேரா­வில் உள்ள ஓர் அலு­வ­ல­கத்­தில் ஒன்­று­கூ­டல் இடம்­பெறு­வ­தாக போலி­சுக்­குத் தக­வல் வந்­தது. அங்கு சென்று பார்த்­த­போது, 24 முதல் 56 வய­துக்­குட்­பட்ட ஆட­வர் 19 பேரும் பெண்­கள் எழு­வ­ரும் ஒன்­று­கூ­டிக் கும்­மா­ள­மிட்­டது தெரி­ய­வந்­தது.

இந்த மூன்று சம்­ப­வங்­க­ளி­லும் பொதுக் கேளிக்­கை­யும் மது­பா­னங்­களும் உரிய உரி­ம­மின்றி வழங்­கப்­பட்­ட­தாக போலிஸ் குறிப்­பிட்­டது.

கர­வோக்கே சாத­னம். மது­பான விநி­யோ­கம், விருந்து துணைச்­சா­த­னங்­கள் ஆகி­யவையும் கைப்­பற்­றப்­பட்­டன.

உரிய உரி­ம­மின்றி பொதுக் கேளிக்கை அல்­லது மது­பா­னம் விநி­யோ­கித்த குற்­றங்­கள் மெய்ப்­பிக்­கப்­பட்­டால், ஒவ்­வொரு குற்­றத்­திற்­கும் $20,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

அர­சாங்க அதி­காரி மீது இழி­சொல்­லைப் பயன்­ப­டுத்­து­வது தண்­டிக்­கத்­தக்க குற்­றம் என்­ப­தால் $5,000 வரை அப­ரா­தம், ஓராண்டு வரை சிறை அல்­லது இவ்­விரு தண்­ட­னை­களும் விதிக்­கப்­ப­ட­லாம்.

கொவிட்-19 (தற்­கா­லிக நட­வடிக்­கை­கள்) (கட்­டுப்­பாட்டு ஆணை) ஒழுங்­கு­வி­தி­கள் 2020 சட்­டத்­தின்­கீழ் வரும் பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­க­ளுக்கு இணங்கி நடக்­காத குற்­றம் உறுதி­செய்­யப்­பட்­டால் ஆறு மாதங்­கள் வரை சிறை, $10,000 வரை அப­ரா­தம் அல்­லது இவ்­விரு தண்­டனை­களும் விதிக்­கப்­ப­ட­லாம்.