'அனைத்துலக பங்காளித்துவம் வலுப்பெற வேண்டும்'

'அனைத்துலக பங்காளித்துவம் வலுப்பெற வேண்டும்'

2 mins read
0077d735-33b1-48ca-896a-5ba43c87aae7
உள்ளூர் காய்கறிப் பண்ணைகளுக்கும் இதர பங்காளித்துவ அமைப்புகளுக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மீட்­சிக்­கும் வளர்ச்­சிக்­கும் தன்னை ஒரு பங்­கா­ளி­யாக நிலைப்­ப­டுத்­திக்­கொள்­வ­து­டன், அண்டை நாடு­களு­டன் ஒரு வலு­வான பங்­கா­ளித்­து­வத்தை சிங்­கப்­பூர் ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

அதற்கு, இவ்­வட்­டா­ரத்­தில் சிறிய, பெரிய நாடு­க­ளு­டன் வர்த்­த­கப் பங்­கா­ளித்­து­வத்­தின் மூலம் பணி­யாற்றி, வட்­டார நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூ­ரின் ஈடு­பாட்­டை­யும் அறி­வாற்­ற­லை­யும் விரி­வுப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

கொரோனா கொள்­ளை­நோய் காலத்­தில் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யலை உரு­மாற்ற அமைக்­கப்­பட்ட 'மேலும் வலிமை பெற்று எழு­வ­தற்­கான பணிக்­குழு' நேற்று வெளி­யிட்ட பரிந்­து­ரை­களில் இவை­யும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

"சிறிய மற்­றும் திறந்த பொரு­ளி­ய­லைக் கொண்­டி­ருக்­கும் நாடு என்ற முறை­யில் அனைத்­து­லக வர்த்­த­கம் சிங்­கப்­பூ­ருக்கு இன்­றி­ய­மை­யா­தது," என்று கடந்த ஆண்டு மே மாதம் அமைக்­கப்­பட்ட அந்­தப் பணிக்­குழு தெரி­வித்­தது.

"பிரச்­சி­னை­கள் நிறைந்த உல­கில், எதிர்­த் தி­சை­யில் வரும் அலை­களை நாம் கடந்து செல்­வ­தற்­கு­ரிய ஆற்­ற­லைப் பெற்­றி­ருக்க வேண்­டும். அதற்கு உலக நாடு­க­ளு­டன் வலு­வான, அர்த்­த­முள்ள அனைத்­து­லக பங்­கா­ளித்­து­வத்தை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும்.

"சிங்­கப்­பூர் குறிப்­பாக தென்­ கி­ழக்­கா­சிய நாடு­க­ளுக்­குப் பங்­க­ளிக்க வேண்­டும். ஆசிய அள­வில் சீனா, ஜப்­பான் ஆகி­ய­வற்­றுக்கு அடுத்த நிலை­யில் மூன்­றா­வது பெரிய சந்­தை­யாக ஆசி­யான் திகழ்­கிறது. உலக அள­வில் பார்க்­கும்­போது, அது ஐந்­தா­வது ஆகப் பெரிய சந்­தை­யா­கத் திகழ்­கிறது.

அனைத்­து­ல­க­ம­யமாக விழை­யும் நிறு­வ­னங்­களை ஒன்­று­சேர்க்க இன்­னும் அதி­க­மான தளங்­கள் அமைக்­கப்­பட வேண்­டும். பின்­னர் வட்­டார நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் புரிய அவற்றுக்கு ஊக்­க­மும் ஆக்­க­மும் கொடுக்க வேண்­டும்," என்­றும் பணிக்­குழு விவ­ரித்­தது.

இது, உலக அள­வில் தனித்து வர்த்­த­கம் செய்ய சிர­மப்­படும் நிறு­வ­னங்­கள், ஒரு குழு­ம­மாக செயல்­பட்டு, ஆக்­க­பூர்­வ­மான ஒத்­து­ழைப்­பு­டன் வர்த்­த­கத்­தில் வெற்றி பெற வழி வகுக்­கும் என்­றும் பணிக்­குழு­வின் அறிக்கை கூறி­யது.

பசுமை வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள யோசனை

நீடித்த நிலைத்­தன்மை துறை­யில் வளர்ச்சி வாய்ப்­பு­க­ளைப் பற்­றிக்­கொள்­ளும் முயற்­சி­யின் ஓர் அம்­ச­மாக, சிங்­கப்­பூர் தன்னை கரிம வர்த்­தக மற்­றும் சேவை­கள் மைய­மாக வலுப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று 'மேலும் வலிமை பெற்று எழு­வ­தற்­கான பணிக்­குழு' நேற்று கூறி­யது.

"நீடித்த நிலைத்­தன்மை என்­றென்­றும் இருக்­கக்­கூ­டிய ஒரு முக்­கி­ய­மான அம்­சம் என்­பதை கொவிட்-19 தெளி­வாக எடுத்துரைத் ­தி­ருக்­கிறது. பசு­மைப் பொரு­ளி­ய­லுக்கு அதி­க­ரித்து வரும் தேவை, சிங்­கப்­பூ­ருக்கு இத்­து­றை­யில் தனது வளர்ச்சி நிலையை உறு­தி­யாக்க ஒரு வாய்ப்பை அளித்­துள்­ளது," என்­றும் 'மேலும் வலிமை பெற்று எழு­வ­தற்­கான பணிக்­குழு'வின் இணைத் தலை­வ­ரான தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­தார்.

எல்லா நாடு­களும் வந்­து­போகக்­கூ­டிய வச­தி­யான இடம், நம்­பிக்கை மிகுந்த தர­கர், நிபு­ணத்­துவ சேவைகள், நிதி மையம் போன்ற மதிப்பைப் பெற்றுள்ள சிங்கப்பூர், கரிம சேவை­கள் மற்­றும் வர்த்­தக மைய­மாக தன்னை நிலை­நி­றுத்­திக்­கொள்ள நல்ல நிலையில் உள்ளது என்றும் திரு லீ சொன்னார்.