மாறிவரும் வேலைச் சூழலுக்கு ஏற்ப, வர்த்தகங்கள் தங்களை உருமாற்றிக்கொண்டு வரும் வேளையில், ஊழியர்களும் புதிய அல்லது மறுவடிவமைக்கப்பட்ட வேலை களுக்கான சரியான திறன்களைப் பெற்றிருக்க வேண்டும்.
வர்த்தகங்களைத் தவிர, பயிற்சி வழங்குநர்கள், உயர்கல்வி நிலையங்கள், தொழிலாளர் சங்கங்கள் போன்றவை ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத்தொழில் முன்னேற்றத்துக்கு உதவ முடியும் என்று 'மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழு' நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அதேவேளையில், உள்ளூர் ஊழியரணியின் ஆற்றலை மேம்படுத்த உதவும் வெளிநாட்டு திறனாளர்களை சிங்கப்பூர் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்.
"நிச்சயமில்லாத எதிர்காலத்துக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள, ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்," என்று 'மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழு'வின் இணைத் தலைவரான தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
"இந்தப் பயணத்தில் ஊழியர் களுக்கு ஆதரவளித்து, அவர் களுக்குத் தேவைப்படும் உதவி களையும் வளங்களையும் நாங்கள் வழங்குவோம். அதன் மூலம் அவர்கள் கொவிட்-19க்குப் பிந்திய உலகில் புதிய, மேம்பட்ட வேலைகளில் பணியாற்ற முடியும்."
"ஊழியர்கள் தங்களை மேம் படுத்திக்கொள்ள, தொழிற்சங்கங்களுடன் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி, ஊழியர் களுக்குத் தேவையான பயிற்சிகளை அடையாளம் கண்டு அதற்கேற்றவாறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்த வேண்டும்," என்றும் அமைச்சர் லீ பரிந்துரைத்தார்.
கொவிட்-19 கொள்ளைநோயின் தாக்கம் பற்றி பேசிய திரு லீ, கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பயணத்துறை ஊழியர்களுக்கு மறு பயிற்சி அளித்து, அவர்கள் மற்ற வேலைகளில் பணியாற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை பணிக்குழு அறிந்துள்ளது என்றார்.
நல்ல தரமான வேலைகளைக் கொண்ட ஒரு உயர் திறன்மிக்க ஊழியரணி, பொருளியல் உருமாற்றத்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
நம்மிடம் உள்ள திறனாளர்களை வைத்தே நாம் நமது போட்டித்தன்மையை வலுவாக்கிக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி னார்.

