செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
8e3cb38a-2f42-4438-9586-cda8dc1460ce
-

சம­ய தலை­வர்­கள்: கொவிட்-19 சூழலில் ஒற்­றுமை காப்­போம்

கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழ­லில், ஒற்­றுமை காக்­கும்­படி சிங்­கப்­பூ­ரர்­களை இங்­குள்ள ஆறு சமய அமைப்­பு­க­ளின் தலை­வர்­கள் ஒன்­று­சேர்ந்து கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்­பின் தலை­வர் முக­மது ஹாஸ்பி அபு பக்­கர் இன்று விடுத்த அறிக்­கைக்கு, இந்து அறக்­கட்­டளை வாரி­யம், இந்து ஆலோ­சனை மன்­றம், சிங்­கப்­பூர் ரோமன் கத்­தோ­லிக்க பேரா­யம், சிங்­கப்­பூர் புதிஸ்ட் லாட்ஜ், தாவோ சம்­மே­ள­னம் ஆகி­யவை இணைந்து ஆத­ரவு தெரி­வித்­தன.

சம­யத் தலை­வர்­கள் எனும் முறை­யில், கிருமிதான் நமது பொது எதிரி என்­றும் மக்­களோ, நாடு­களோ அவர்­க­ளது சம­யங்­களோ இல்லை என்றும் தங்­கள் சம­யங்­க­ளைப் பின்­பற்­று வோருக்கு நினை­வூட்­டு­வ­தாக அமைப்­பு­கள் கூறின.

வசதி குறைந்­த­வர்­க­ளுக்­கும் உடல் குறை­பாடு உள்­ள­வர்­க­ளுக்­கு­மான சேவை­க­ளைத் தொட­ரப் போவ­தாகவும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள், அவர்க­ளின் குடும்­பங்­கள் உட்­பட, சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை இடையே இன, சமய அமை­தி­யை­யும் ஒற்­று­மை­யை­யும் கட்டிக்­காக்க உறுதி பூண்­டி­ருப்­ப­தா­க­வும் அமைப்புகள் தெரிவித்தன.

நெருக்­கடி காலங்­க­ளின்­போது, மக்­கள் ஒன்­றி­ணைந்­தி­ருப்­பது அவ­சி­யம் என்­ப­தால் இந்து அறக்­கட்­டளை வாரி­யம் அந்த அறிக்­கைக்கு ஆத­ரவு நல்­கி­ய­து என்றார் அதன் தலைமை நிர்­வாக அதிகாரி திரு த. ராஜ­சே­கர்.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­களால் மீண்­டும்

பணிப்­பெண் பற்­றாக்­குறை

இந்த மாதம் அறி­விக்­கப்­பட்ட புதிய எல்­லைக் கட்­டுப்­பாடு களால், பணிப்­பெண்­களை வேலைக்கு அமர்த்­தும் முத­லாளி களுக்­கும் முக­வை­க­ளுக்­கும் புதிய சிக்­கல் ஏற்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 தொற்று அபா­யம் அதி­கம் உள்ள நாடு­களில் இருந்து புதி­தாக யாரும் வேலை அனு­மதி பெற்று இங்கு வர அனு­மதி வழங்­கப்­ப­டாது என்று மனி­த­வள அமைச்சு இம்­மா­தம் 7ம் தேதி அறி­வித்­தது. முன்­ன­தா­கவே அனு­மதி பெற்று, இந்த மாதம் வர­வேண்­டி­ய­வர்­க­ளின் பய­ணத் தேதி­களும் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

அடுத்து இனி எப்­போது புதி­தாக அனு­மதி வழங்­கப்­படும் என்று தெரி­யாத நிலை­யில், பல முக­வை­க­ளுக்கு நிதிச் சுமை ஏற்­பட்­டுள்­ளது என்றார் சிங்­கப்­பூர் வேலை­வாய்ப்பு முக­வை­கள் சங்­கத்­தின் தலை­வர் திரு­வாட்டி ஜெயப்­பி­ரேமா.

புதிய பணிப்­பெண்­கள் இல்லை என்­ப­தால் நிறு­வ­னங்­கள் அவற்­றின் வாடிக்­கை­யா­ளர்­களை இழந்­துள்­ளன. ஏற்­கெ­னவே தமது சங்­கத்­தில் உள்ள சுமார் 300 முக­வை­களில் 10 விழுக்­காட்டு முக­வை­கள் மூடி­விட்­டதாக அவர் கூறினார்.

ஃபாண்டி அக­ம­தின் மூன்­றா­வது மகன் தேசிய குழு­வில் விளை­யாட அழைப்பு

சிங்­கப்­பூ­ரின் காற்­பந்­துப் பிர­ப­ல­மான ஃபாண்டி அக­ம­தின் இரண்டு மகன்­க­ளான இர்­ஃபான், இஹ்­சான் ஆகி­யோர் தற்­போது தேசிய காற்­பந்­துக் குழு­வில் விளை­யாடி வரு­கி­றார்­கள்.

இப்­போது அவ­ரது மூன்­றா­வது மக­னான 18 வயது இல்­ஹா­னுக்­கும் (படம்) தேசிய காற்­பந்­துக் குழு­வில் முதல் முறை­யாக விளை­யாட அழைப்பு வந்­துள்­ளது.

அடுத்த மாதம் சவூதி அரே­பி­யா­வில் நடை­பெ­றும் 2022 உல­கக் கிண்­ணத் தகு­திச் சுற்று ஆட்­டங்­களில் விளை­யாட சிங்­கப்­பூர் தேசிய காற்­பந்­துக் குழு­வின் தலை­மைப் பயிற்­று­விப்­பா­ளர் தட்­சுமா யோஷிடா இல்­ஹா­னுக்கு அழைப்பு விடுத்­துள்­ளார். இல்­ஹான் தற்­போது யங் லயன்ஸ் குழு­வுக்கு விளை­யாடி வரு­கி­றார்.

டி பிரி­வில் பாலஸ்­தீ­னம் (ஜூன் 3), உஸ்­பெ­கிஸ்­தான் (ஜூன் 7), சவூதி அரே­பியா (ஜூன் 11) ஆகிய நாடு­களை சிங்­கப்­பூர் சந்­திக்­கும். சிங்­கப்­பூர் சவூதி அரே­பி­யா­வுக்கு செல்­வ­தற்கு முன் துபா­யில் இம்­மா­தம் 29ஆம் தேதி­யன்று ஆப்­கா­னிஸ்­தா­னு­டன் ஒரு பயிற்சி ஆட்­டத்­தில் விளை­யா­டும்.

மத­ரஸா, இஸ்­லா­மி­ய கல்வி வகுப்­பு­கள் நாளை முதல் இணை­யத்­தில் நடத்­தப்­படும்

மத­ரஸா இஸ்­லா­மி­யப் பள்­ளி­கள், பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெ­றும் இஸ்­லா­மிய பண்­பு­நெறி வகுப்­பு­கள், இஸ்­லா­மிய கல்வி நிலைய வகுப்­பு­கள் ஆகி­யவை நாளை முதல் இணை­யத்­தில் நடத்­தப்­படும் என்று முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இருப்­பி­னும், பிள்ளை பரா­ம­ரிப்­புக்­குத் தகுந்த ஏற்­பாடு செய்ய முடி­யாத பெற்­றோர்­க­ளுக்­காக குறைந்த அள­வி­லான மாண­வர்­க­ளுக்கு மத­ர­ஸா­வில் பாடங்­கள் நடத்­தப்­படும் என்­றும் முயிஸ் கூறி­யது.

அத்­தி­யா­வ­சிய சேவை தொடர்­பான வேலை­க­ளைச் செய்­யும் பெற்­றோர்­க­ளின் பிள்­ளை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்­றும் நேற்று வெளி­யி­டப்­பட்ட அறிக்கை கூறி­யது.

"வீட்­டி­லி­ருந்து கற்­ப­தற்­குத் தேவைப்­படும் கற்­றல் பொருட்­க­ளைப் பெறு­வது தொடர்­பான தக­வல்­களை மத­ர­ஸாக்­கள் பெற்­றோர்­க­ளுக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் தெரி­விக்­கும். கற்­ற­லுக்­குத் தேவைப்­படும் மின்­னி­லக்­கக் கரு­வி­கள் இல்­லாத மாண­வர்­க­ளுக்கு உதவி வழங்­கப்­படும்." என்­றும் முயிஸ் தெரி­வித்­தது.

கொவிட்-19 தொடர்­பான கட­டு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கும் இக்­கா­லத்­தில் இஸ்­லா­மிய கல்வி நிலைய வகுப்­பு­களை நடத்­தும் அமைப்­பு­கள் தங்­கள் வகுப்­பு­கள் அனைத்­தை­யும் இணை­யத்­துக்கு மாற்­றி­விட முயிஸ் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.