குடும்ப பாதுகாப்புக்கு சொந்த சமூக வட்டத்தை உருவாக்குக

குடும்ப பாதுகாப்புக்கு சொந்த சமூக வட்டத்தை உருவாக்குக

2 mins read
777453e7-0153-4ce3-8333-4deffdcd79be
மக்கள் சொந்தமாக சிறிய சமூக பாதுகாப்பு வட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இணைப் பேராசிரியர் டேவிட் லை கூறுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வல்லுநர்: அரசாங்கம் சொல்வதற்கு மேலும் பாதுகாப்பாக மக்கள் செயல்படவேண்டும்

சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 சூழ்­நிலை சென்ற ஆண்டு முடக்­கம் நடப்­புக்கு வந்­த­தற்கு முன் இருந்­த­தை­விட இப்­போது அதிக ஆபத்­தா­ன­தாக போய்­வி­டக்­கூ­டும்.

பாது­காப்­புக்­குத் தேவையா னவை என்று அர­சாங்­கம் கூறு வதைச் செய்­வ­தோடு இருந்துவிடா மல் அதற்கு மேலும் பல­வற்றை யும் மக்­கள் செய்ய வேண்­டும் என்று தேசிய தொற்­று­நோய் நிலை­யத்­தின் இணைப் பேரா­சி­ரி­யர் டேவிட் லை வலி­யு­றுத்தி கூறு­கி­றார்.

அர­சாங்­கம் நடை­மு­றைப்­ப­டுத்தி இருக்­கும் நிபந்­த­னை­க­ளைக் காட்­டி­லும் மேலும் பல­வற்றை இங்­குள்ள மக்­கள் செய்­ய­வேண்­டும் என்று அந்த நிலை­யத்­தின் தொற்­று­நோய் ஆய்வு மற்­றும் பயிற்சி அலு­வ­லக இயக்­கு­ந­ரான அவர் தெரி­வித்­தார்.

அவ­ரு­டைய செய்தி வாட்ஸ் அப்­பி­லும் இதர சமூக ஊட­கத் தளங்­க­ளி­லும் வலம் வரு­கிறது.

அந்­தச் செய்தி இணைப் பேரா­சி­ரி­யர் டேவிட் லை எழுதியதுதான் என்­பது உறு­தி­பட தெரி­ய­வந்­து உள்ளதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்டு உள்­ளது.

வீட்­டி­லேயே தங்கி இருப்­பது, கூட்­ட­மான இடங்­க­ளைத் தவிர்த்­துக்­கொள்­வது போன்­ற­வற்­றோடு மக்­கள் தாங்­க­ளா­கவே சிறிய சமூக பாது­காப்பு வட்­டத்தை ஏற்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.

அந்த வட்­டத்­தைத் தாண்டாமல் அதற்குள்ளாகவே நட­மாட உறுதி பூண்டு இருப்­போரை மட்­டுமே அந்­தப் பாது­காப்பு வட்­டம் கொண்­டி­ருக்­க­வேண்­டும்.

அவர்­களில் பலர் நெருங்­கிய குடும்ப உறுப்­பி­னர்­க­ளாக இருக்க வேண்­டும் என்று டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் தொற்­று­நோய்த் துறை மூத்த ஆலோ­ச­கரு­மான பேரா­சி­ரி­யர் கூறு­கி­றார்.

பூங்­காக்­களில் நடக்­கும்­போது கூட வாயை­யும் மூக்­கை­யும் மூடி­ய­படி முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும். தடுப்­பூ­சியை மக்­கள் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சென்ற ஆண்­டில் நிலைமை மோச­மாக இருந்­தது. வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் தொற்று அதி­க­மாக இருந்­தது. அது அரும்­பா­டு­பட்டு கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தொடர்பு இல்­லா­மல் கிருமி தொற்­றும் சம்­ப­வங்­கள் அதி­க­மாகி இருக்­கின்­றன.

இதை வைத்துப் பார்க்­கை­யில் சாங்கி விமா­ன­ நி­லைய தொற்­றில் இருந்து சமூ­கத்­திற்கு அதிக அள­வில் கிருமி பரவி இருக்­க­லாம் என்று அனு­மா­னிக்க முடி­கிறது என்­றார் அவர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 40 விழுக்­காடு முதல் 50 விழுக்­காட்­டி­ன­ருக்கு அறி­கு­றி­கள் தெரி­வ­தில்லை. என்­றா­லும் அவர்­க­ள் மூலம் வேக­மாக தொற்று பர­வக்­கூ­டும். இதர 10 விழுக்­காட்­டி­ன­ருக்கு ஆக்­சி­ஜன் தேவைப்­படும் அள­வுக்­குப் பாதிப்பு ஏற்­ப­ட­லாம்.

சிங்­கப்­பூ­ரில் ஆற்­றல்­மிக்க தடுப்பு மருந்து சிகிச்சை பரி­சோ­தனை வச­தி­கள் இருக்­கின்­றன.

ஆனால் இந்­தி­யா­வில் இருந்து பரவி இருக்­கும் புதிய உரு­மா­றிய கிரு­மி­கள் முகக்­க­வ­சங்­கள், தடுப்­பூ­சி­கள் எல்­லா­வற்­றை­யும் மீறி இங்கு பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றன என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். இது மோச­மான ஒன்று என்­றார் அவர்.

"உங்­கள் குடும்­பத்­தைப் பாது­காப்­பாக காப்­பாற்ற நீங்­கள் விரும்­பி­னால் மேலே கூறி­யதை காது­கொ­டுத்து கேட்டு அவ்­வாறே செயல்­ப­டுங்­கள்," என்று அவர் தெரி­வித்து உள்­ளார்.