புதிதாக 28 பேருக்கு கொவிட்-19 தொற்று; சமூகத்தொற்றுக்கு ஆளானோர் 21 பேர்

புதிதாக 28 பேருக்கு கொவிட்-19 தொற்று; சமூகத்தொற்றுக்கு ஆளானோர் 21 பேர்

2 mins read
e705ef8d-7190-4dea-9170-4af75e6a85e5
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 21 பேருக்கு சமூ­கத்­தொற்று உறு­திப்­படுத்­தப்­பட்­டது. அவர்­களில் 11 பேர் தொடர்பு இல்­லா­த­வர்­கள். இதர 10 பேர் முன்பு கிருமி தொற்றி இருந்­தோ­ரு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் ஆறு பேர் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள்.

நேற்று மொத்­தம் 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. ஏழு பேர் வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்­த­வர்­கள்.

தனி­மை­யில் இருக்க வேண்­டும் என்று அவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் நேற்று புதி­தாக தொற்று யாருக்­கும் இல்லை. கொவிட்-19 தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 61,613 ஆகி இருக்­கிறது.

இத­னி­டையே, மரினா பே சேண்ட்ஸ் நிறு­வ­னம் துப்­பு­ரவுப் பணி­க­ளுக்­காக தன்­னு­டைய சூதாட்­டக் கூடத்தைத் தற்­கா­லி­க­மாக மூடு­வ­தாக தெரி­வித்­தது.

சூதாட்­டக் கூட ஊழி­யர்­கள் இரண்டு பேருக்குத் தொற்று இருந்­தது ஞாயிற்­றுக்­கி­ழமை உறு­திப்­படுத்­தப்­பட்­டது. ஞாயி­றன்று சமூகத்­தில் 38 பேர் புதி­தாக தொற்­றுக்கு ஆளா­னார்­கள்.

அவர்­களில் 21 பேர் முந்­தைய நோயா­ளி­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். நான்கு தொடக்­கப் பள்ளி மாண­வர்­கள் உள்­ளிட்ட மேலும் ஒன்­பது பேர் லேர்­னிங் பாயிண்ட் கல்வி நிலைய தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

சிங்­கப்­பூர் பல­துறை தொழில்­நுட்­பக் கல்­லூரி மாண­வர் ஒரு­வ­ருக்கு சனிக்­கி­ழமை தொற்று உறுதி­யா­ன­தாக அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கம் அறிக்கை ஒன்­றில் ஞாயிற்­றுக்­கிழமை தெரி­வித்­தது.

அந்த மாண­வர் சென்­றி­ருந்த கல்­லூரி வளா­கம் முற்­றி­லும் மருந்­தடித்து சுத்­தப்­ப­டுத்­தப்­பட்டுள்ளது.

இத­னி­டைய, ராஃபிள்ஸ் மருத்­து­வ­ம­னை­யில் கொவிட்-19 தொற்­றுக்கு ஆளாகி இருந்த தாதி ஒரு­வ­ரு­டன் அணுக்­கத் தொடர்­பில் இருந்த அனை­வ­ருக்­கும் தொற்று இல்லை என்­பது பரி­சோ­தனை மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

சமூ­கத்­தில் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் தொடர்பு இல்­லா­மல் 17 பேருக்கு தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் அவர்­களில் அந்த 29 வயது தாதி­யும் ஒரு­வர் என்றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று தெரி­விக்­கப்­பட்­டது.

அதை­ய­டுத்து அவ­ரு­டன் அணுக்­கத் தொடர்­பில் இருந்த அனை­வ­ருக்­கும் பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு யாருக்­கும் தொற்று இல்லை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த விவ­ரங்­களை ராஃபிள்ஸ் மருத்­து­வக் குழு­மம் தெரி­வித்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­து உள்ளது.