புதிய தனியார் வீடுகள் விற்பனை 4 ஆண்டுகளில் அதிகம்

புதிய தனியார் வீடுகள் விற்பனை 4 ஆண்டுகளில் அதிகம்

2 mins read
67ded2c6-5f81-478b-9c6b-640c4aef66cb
-

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஏப்­ரல் மாதம் புதிய தனி­யார் வீடு­கள் விற்­பனை மார்ச் மாதத்­தை­விட குறைந்­தது. இருந்­தா­லும் சென்ற ஆண்டு ஏப்­ர­லு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு ஏப்­ர­லில் விற்­பனை மும்­மடங்­கிற்­கும் அதி­க­மாக உள்ளது.

2017க்குப் பிறகு ஏப்­ரல் மாதத்­தில் இடம்­பெற்ற அதிக விற்­பனை இதுவே ஆகும்.

சென்ற மாதம் 1,262 வீடு­கள் வாங்­கப்­பட்­டன. மார்ச் மாதம் கைமா­றிய வீடு­க­ளின் எண்­ணிக்கை 1,296 ஆக இருந்­தது. 2020 ஏப்­ர­லில் 227 வீடு­கள்­தான் விற்­கப்­பட்­டன. இத­னு­டன் ஒப்­பிடு­கை­யில் இந்த ஆண்டு ஏப்­ரல் மாத விற்­பனை 356% கூடின.

இத­னி­டையே, வீடு­க­ளைக் கட்டி விற்­ப­வர்­கள் ஏப்­ரல் மாதம் 1,038 வீடு­களை விற்­ப­னைக்­குக் கொடுத்­தனர். மார்ச் மாதத்­தில் விற்­ப­னைக்கு வந்த 959 வீடு­களை­விட இது 8% அதி­கம்.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் பார்க்­கை­யில் இந்த ஆண்டு ஏப்­ர­லில் விற்­ப­னைக்குக் கொடுக்­கப்­பட்ட வீடு­கள் 62% அதி­கம். நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் இந்த நில­வ­ரங்­கள் தெரி­ய­வ­ரு­கின்­றன.

இவற்­றில் எக்­ஸி­கி­யூட்­டிவ் கூட்­டு­ரிமை வீடு­கள் உள்­ள­டங்­காது.

இந்­தக் கூட்­டு­ரிமை வீடு­களைச் சேர்த்துப் பார்க்­கை­யில் சென்ற மாதம் 1,342 புதிய வீடு­கள் விற்­கப்­பட்­டன. மார்ச் மாதம் கைமா­றிய வீடு­க­ளை­விட இது 2.3 விழுக்­காடு குறைவு. இந்த ஆண்­டின் முதல் 4.5 மாதங்­களில் எட்டு முறை புதிய வீடு­கள் விற்­ப­னைக்கு வந்தன.

இந்த நிலை­யில், கொஞ்­சம் இடை­வெளி விடும் வகை­யில் மே, ஜூன் மாதங்­களில் புதிய வீடு­கள் விற்­ப­னைக்கு வராது என்று 'ஹட்டன்ஸ் ஏஷியா' நிறு­வ­ன தலைமை நிர்­வாகி மார்க் யிப் கூறு­கி­றார். மே 16 முதல் ஜூன் 13 வரை கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கும் என்­ப­தால் சந்தை கொஞ்­சம் மெது­வ­டை­யும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஜூலை மாதம் ஐந்து இடங்­களில் புதிய வீடு­கள் விற்­ப­னைக்கு வரும் வாய்ப்பு இருக்­கிறது. விற்­பனை குறைந்­தா­லும் விலை அதி­கம் உள்ள வீடு­கள் அதிக எண்­ணிக்­கை­யில் கைமாறி உள்ளதாக ஆரஞ்­சுடீ & டை நிறு­வ­னத்­தின் மூத்த துணைத் தலை­வ­ரும் பகுப்­பாய்­வா­ள­ரு­மான திரு­வாட்டி கிறிஸ்­டைன் சன் கூறினார்.

சதுர அடி $2,000க்கும் அதிக விலை­யில் விற்­கப்­பட்ட மாடி வீடு­களின் (எக்­ஸி­கி­யூட்­டிவ் கூட்­டு­ரிமை வீடு­கள் நீங்­க­லாக) விகி­தாச்­சா­ரம் பிப்­ர­வ­ரி­யில் 38.8 விழுக்­கா­டாக இருந்­தது. இது ஏப்­ர­லில் 55.4% ஆக கூடி­யது.

இந்த நில­வ­ரம் பய­னீட்­டா­ளர்­களி­டம் நம்­பிக்கை வலு­வ­டைந்து இருப்­பதை எடுத்­துக்­காட்­டு­வ­தாக இருக்­கிறது என்றார் அவர்.

ஏப்­ரலில் கைமா­றிய வீடு­களில் பெரும்­பா­லா­னவை நகர விளிம்­புப் பகு­தி­யில் அல்­லது மத்­திய வட்­டா­ரத்­தின் இதர பகு­தி­களில் இருப்­பவை என்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

கொவிட்-19 கார­ண­மாக கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்­துள்­ள­தால் கொஞ்ச காலத்­திற்கு விற்­பனை வேகம் பாதிக்­கப்­ப­ட­லாம். இருந்­தா­லும் சென்ற ஆண்டு முடக்­கம் முதலே தொழில்­நுட்ப உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளன என்­ப­தை­யும் திரு­வாட்டி சன் சுட்­டி­னார்.