தடுப்பூசியால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாதுகாப்பு

தடுப்பூசியால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாதுகாப்பு

2 mins read
c4d82708-b713-4b03-9a60-350fc1321b61
-

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

கொவிட்-19 கிரு­மித்தொற்­றுக்கு எதி­ரான முயற்சி வெற்­றி­பெற தடுப்­பூ­சிப் போட்­டுக்­கொள்­வது முக்­கி­யம். அறு­பது வயது மற்­றும் அதற்கு மேலான வய­து­டைய முதி­யோரில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தகு­தி­யா­ன­வர்­களில் 71 விழுக்காட்டினர் இது­வரை தடுப்­பூ­சிப் போட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

தகு­தி­யான 45 வய­துக்­கும் 59 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­களில் கிட்­டத்­தட்ட 66 விழுக்காட்டினர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்டோ அதற்கு முன்­ப­திவு செய்தோ உள்­ள­னர்.

இத்­த­க­வல்­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்ள அமைக்­கப்­பட்­டுள்ள அமைச்­சு­கள் நிலை பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டன.

தடுப்­பூசி போட விரும்­பா­த­வர்­க­ளால் மற்­ற­வர்­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டுமா என்ற தமிழ் முர­சின் கேள்­விக்கு அமைச்­சர்­களும் மருத்­துவச் சேவை­கள் இயக்கு­ந­ரும் பதி­ல­ளித்­த­னர்.

"பலர் தாங்­களே முன்­வந்து தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது வர­வேற்­கத்­தக்­கது. அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டால் அது ஒட்­டு­மொத்த சமூ­கத்­திற்கு கூடு­தல் பாது­காப்­பைத் தரும்," என்று மருத்­துவ சேவை­கள் இயக்­கு­நர் இணைப் பேரா­சி­ரி­யர் கென்­னத் மாக் தெரி­வித்­தார்.

"தடுப்­பூ­சிப் போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் அறி­கு­றி­கள் இருக்­காது. அல்­லது இலே­சான அறி­கு­றி­கள் மட்­டுமே தென்­ப­டக்­கூ­டும் என ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன. கிரு­மித்­தொற்று ஏற்­படும் சாத்­தி­ய­மும் குறைவு. மேலும் தொற்று ஏற்­பட்­டுள்­ள­வ­ரால் பிற­ருக்கு தொற்­றா­மல் இருக்­க­வும் தடுப்­பூ­சி­கள் உத­வும்," என்­றார் திரு மாக்.

"ஏறத்­தாழ 70 அல்­லது 80% மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் இலக்கு இருப்­பது நல்­லது. அனை­வ­ரது ஒத்­து­ழைப்­பு­டன் அதனை அடை­ய­லாம்," என்­றார் அவர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களும் பாது­காப்­பாக இருப்­பதை உறு­தி­செய்­து­கொள்­ள­வேண்­டும் என்று பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மற்­ற­வர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­க­வேண்­டும். அதே நேரம் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை கவ­ன­மா­கப் பின்­பற்­று­வதை தடுப்­பூ­சிப் போட்­டுக்­கொண்­ட­வர்­களும் உறு­திச்­செய்­ய­வேண்­டும்," என்­றார் அவர்.

சுகா­தார அமைச்­ச­ரும் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு ஓங் யி காங், தடுப்­பூ­சி போட்­டுக்­கொள்ள தற்­போது விரும்­பா­த­வர்­களும் பிறகு போட்­டுக்­கொள்ள ஆர்­வம் தெரி­விக்க வாய்ப்­புள்­ளது என்­றும் அதற்கு அவர்­க­ளுக்கு நேரம் தேவை என்­ப­தால் அதை அவர்­க­ளுக்­குக் கொடுக்­க­வேண்­டும் என்­றும் தெரி­வித்­தார்.

"பாதக, சாத­கங்­களை அவர்­கள் பொறுத்­தி­ருந்து பார்க்க எண்­ணு­வார்­கள். விநி­யோ­கத்­திற்கு மேலான தேவை இருப்­ப­தால் தற்­போது நாம் அவர்­க­ளுக்­குத் தேவைப்­படும் நேரத்­தைக் கொடுக்­க­லாம்," என்­றார் அவர்.