கடலோரப் பாதுகாப்பு: முதல் ஆய்வு அடுத்த வாரம் தொடங்குகிறது

கடலோரப் பாதுகாப்பு: முதல் ஆய்வு அடுத்த வாரம் தொடங்குகிறது

2 mins read
bcc072c8-43a4-458a-8824-c96b125e690e
பாசிர் ரிஸ் கடற்கரை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடல்­மட்ட உயர்­வில் இருந்து சிங்­கப்­பூ­ரின் குறிப்­பிட்ட கட­லோ­ரப் பகு­தி­க­ளைப் பாது­காப்­பது எப்­படி என்­பது தொடர்­பான நான்கு ஆய்வு­களில் முத­லா­வது ஆய்வு அடுத்த வாரம் தொடங்­க­வி­ருக்­கிறது.

அந்த ஆய்வு, தீவின் தென்­கிழக்­குப் பகு­திக்­கு உட்­பட்ட 57.8 கிலோ­மீட்­டர் நீள கட­லோ­ரப் பகுதி­யில் கவ­னம் செலுத்­தும். சாங்கி, ஈஸ்ட் கோஸ்ட்-மரினா பே வட்­டா­ரத்­திற்கு இடைப்­பட்ட நீட்சி, பரந்த தெற்கு நீர்­மு­கப்பு வட்­டா­ரம் (கிரேட்­டர் சௌதர்ன் வாட்­டர்­ஃபி­ரன்ட்) ஆகிய மூன்று முக்­கி­யப் பகு­தி­கள் அதில் அடங்­கும் என்று பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் நேற்று தெரி­வித்­தது.

இந்த நக­ரம் - ஈஸ்ட் கோஸ்ட் கட­லோ­ரப் பகுதி நீட்­சி­யா­னது, குறிப்­பிட்ட கட­லோ­ரப் பகுதி பாது­காப்பு ஆய்­வு­க­ளுக்­குக் கழ­கம் அடை­யா­ளம் கண்­டுள்ள நான்கு பகு­தி­களில் ஒன்று. லிம் சூ காங், சுங்கை காடுட், ஜூரோங் தீவு ஆகி­யவை மற்ற மூன்று பகு­தி­கள்.

ஜூரோங் தீவு மற்­றும் சுங்கை காடுட், லிம் சூ காங் பகு­தி­களை உள்­ள­டக்­கிய வட­மேற்கு கட­லோ­ரப் பகுதி ஆகி­ய­வற்­றைப் பாது­காப்­ப­தற்­கான ஆய்­வு­கள் முறையே இவ்­வாண்­டின் பிற்­ப­கு­தி­யி­லும் 2022ஆம் ஆண்­டி­லும் இடம்­பெ­றும் என்று கழ­கம் தெரி­வித்துள்ளது.

நக­ரம் - ஈஸ்ட் கோஸ்ட் நீட்­சிப் பகு­திக்­கான ஆய்வை 'சிபிஜி கன்­சல்­டன்ட்ஸ்' நிறு­வ­னம் மேற்­கொள்­ளும் என்­றும் அந்த ஆய்வு முடி­வ­தற்கு ஏறத்தாழ நான்காண்­டு­கள் ஆக­லாம் என்­றும் கழ­கம் கூறி­யது.

மற்ற நாடு­கள் தங்­க­ளது கட­லோ­ரப் பகு­தி­களை எவ்­வாறு பாது­காத்து வரு­கின்­றன என்­பது குறித்த எழுத்­துப்­பூர்வ மறு­ஆய்வு, தர­வுச் சேக­ரிப்பு, தக­வ­மைப்பு நட­வ­டிக்­கை­கள் மற்­றும் வழி­மு­றை­கள் உரு­வாக்­கம், வெள்ள அபா­யத் தடுப்­புத் தீர்­வு­கள் உரு­வாக்­கம் ஆகிய அம்­சங்­களில் ஆய்வு இடம்­பெ­றும்.

ஒரு தீவு நாடாக, கடல்­மட்ட உயர்­வால் சிங்­கப்­பூர் பாதிக்­கப்­பட வாய்ப்புள்ளது. எரி­சக்­திக்­காக புதை­ப­டிம எரி­பொ­ருள்­களை எரிப்­பது போன்ற மனித நட­வ­டிக்­கை­க­ளால் புவி வெப்­ப­ம் அடைந்து வரு­வ­தற்கு கடல்­மட்ட உயர்வு ஓர் அறி­கு­றி­யா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

பசுமை இல்ல வாயுக்­கள் பட­லம் வளி­மண்­ட­லத்­தைச் சூழ்­வ­தால் புவி வெப்­ப­ம­டை­கிறது; கடல்­நீர் விரி­வடை­கிறது; நிலப்­ப­ரப்­பில் உள்ள பனி உரு­கு­கிறது. விளை­வாக, கடல்­மட்­டம் அதி­க­ரித்து, தாழ்­வான பகு­தி­களை மூழ்­க­டிக்­கும் அச்­சுறுத்­தலை ஏற்­ப­டுத்­து­கிறது.

குறிப்­பாக, நக­ரம்-ஈஸ்ட் கோஸ்ட் நீட்சி கட­லோ­ரப் பகுதி எளி­தில் பாதிக்­கப்­படும் அபா­ய­முள்­ளது. விமான நிலை­யம், நீர்ச் சுத்தி­க­ரிப்பு ஆலை, கடற்­ப­டைத்­த­ளம் ஆகிய முக்­கிய உள்­கட்­ட­மைப்­பு­கள் அந்தப்­பகு­தி­யில் அமைந்­துள்­ளன.

பரந்த தெற்கு நீர்­மு­கப்பு வட்­டா­ரம், நகர்ப்­புற வாழ்­வி­டப் பகு­தி­யாக உரு­மாற்­றப்­படும்.

"உள்­ளூர் மேம்­பாடு மற்­றும் நிலப் பயன்­பாட்­டுத் திட்­டங்­க­ளு­டன் நன்கு ஒருங்­கி­ணைக்­கும் வகை­யில், பொறி­யி­யல் மற்­றும் புத்­தாக்க வடி­வ­மைப்­பு­க­ளு­டன் கூடிய இயற்கை சார்ந்த தீர்­வு­களை ஆராய இது ஒரு நல்ல வாய்ப்பு," என்றார் பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் கட­லோ­ரப் பாது­காப்­புப் பிரிவு இயக்கு­நர் ஹேசல் கூ.

இத­னி­டையே, கட­லோ­ரப் பொறி­யி­யல் துறை­யில் கட­லோ­ரப் பாது­காப்பு முக­வை­யின் அறி­வுத்­தி­ற­னை­யும் நிபு­ணத்­து­வத்­தை­யும் மேம்­படுத்த உள்­ளூர், வெளி­நாட்டு நிபு­ணர்­கள் ஐவர் அடங்­கிய கட­லோரப் பாது­காப்பு நிபு­ணர் குழு­வைக் கழகம் அமைத்­துள்­ளது.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­கழகப் பேரா­சி­ரி­ய­ர் சான் எங் சூன் அதன் தலை­வ­ரா­க இருப்பார்.