சமூக அளவில் மேலும் 34 பேருக்குப் பாதிப்பு

சமூக அளவில் மேலும் 34 பேருக்குப் பாதிப்பு

2 mins read
05105cf4-81c6-40eb-8aaf-c3599308f452
-

சிங்­கப்­பூர் நேற்று நண்­ப­கல் நில

வரப்­படி மேலும் 38 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களில் 34 பேர் சமூக அள­வில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இந்த 34 பேரில் நான்கு பேருக்கு ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் தொடர்பு இல்லை. மீத­முள்ள 30 பேர் ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள். இவர்­களில் 28 பேர் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள்.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்த நால்­வ­ருக்­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் வந்­த­தும் அவர்

களுக்கு இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக அமைச்சு கூறி­யது. இவர்­களில் மூவர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­கள் ஆவர். வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கு­வி­டு­தி­களில் புதி­தாக யாருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் பாதிப்

படைந்­தோர் மொத்த எண்­ணிக்கை 61,689ஆக அதி­க­ரித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் புதி­தாக 38 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. அவர்­களில் 27 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது. இந்த 27 பேரில் 11 பேருக்கு கிரு­மித்­தொற்று உள்­ளோ­ரு­டன் தொடர்பு இல்லை.

அவர்­களில் உள்­துறை அமைச்சு ஊழி­யர் ஒரு­வ­ரும் புக்­கிட் தீமா பிளா­சா­வில் உள்ள டோரத்­திஸ் குழந்தை, சிறார் மருந்­த­கத்­தில் உத­வி­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் ஒரு­வ­ரும் அடங்­கு­வர். மருந்­த­கத்­தில் பணி­பு­ரி­யும் அந்த 51 வயது பெண்­மணி இரு­முறை கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

டிபி­எஸ் வங்­கி­யின் முத­லீட்­டுப் பிரி­வில் பணி­யாற்­றும் ஒரு­வ­ருக்­கும் வெஸ்ட்­கேட்­டில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்­ளிக்­குச் செல்­லும் 2 வயது சிறு­வ­னுக்­கும் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தின் மத்­தி­ய கல்­லூ­ரி­யில் பயி­லும் 18 வயது மாண­வ­ருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக நேற்று முன்­தி­னம் தெரி­விக்­கப்­பட்­டது. டிலி­வரூ, கிராப் உணவு விநி­யோக ஓட்­டு­ந­ரா­கப் பணி­யு­ரி­யும் 40 வயது ஆட­வ­ருக்­கும் கொரோனா பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. அவர் இரண்டு முறை கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்.