மேம்பட்ட ஆயத்த நிலையில் மாணவர்களும் பள்ளிகளும்

மேம்பட்ட ஆயத்த நிலையில் மாணவர்களும் பள்ளிகளும்

3 mins read
8bffb5da-7a33-4e9b-9e04-c785fcf302b2
-

வீட்­டி­லி­ருந்து கற்­றல் திட்­டத்­துக்கு மாண­வர்­களும் பள்­ளி­களும் கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் மேம்­பட்ட ஆயத்த நிலை­யில் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கொரோனா தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே கல்வி பயி­லும் முறை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் கடந்த ஆண்­டின் அனு­ப­வங்­க­ளைக் கவ­னத்­தில் கொண்டு இம்­முறை குறு­கிய காலத்­துக்­குள்­ளா­கவே அதனை செயல்­ப­டுத்த முடிந்­தது என ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பள்ளி முதல்­வர்­கள் சிலர் குறிப்­பிட்­ட­னர்.

வீட்­டி­லி­ருந்­த­படி கற்­றல் முறையை கடந்த மாதம் 16 முதல் இம்­மா­தம் 12ஆம் தேதிக்கு உட்­பட்ட கால­கட்­டத்­தி­லும் நடை­மு­றைப்­ப­டுத்தி பயிற்சி பெற்­றி­ருந்­த­தா­க ஹில்­கு­ரோவ் உயர்­நி­லைப் பள்­ளி­யின் முதல்­வர் ஏஞ்­ச­லின் சான் குறிப்­பிட்­டார்.

உதவி தேவைப்­படும் சில பிள்­ளை­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு அவர்­க­ளைப் பள்­ளிக்கு வர­வ­ழைத்து கூடு­தல் கண்­கா­ணிப்­பு­டன் இந்­தக் கால­கட்­டத்­தில் பாடம் நடத்­தப்­படும் என்­றார் அவர்.

வீட்­டி­லி­ருந்­த­படி கற்­கும் மாண­வர்­கள் கற்­றல் நட­வ­டிக்­கை­களில் விருப்­ப­மு­டன் ஈடு­ப­டு­வதை ஊக்கு­ விக்­கும் விதத்­தில் அவர்­க­ளுக்கு உடற்­ப­யிற்சி கல்வி, கலை மற்­றும் இசை, இணை­யம் வழி இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள் போன்­ற­வை­யும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று ராடின் மாஸ் தொடக்­கப்­பள்­ளி­யின் முதல்­வர் முகம்­மது ஃபரி­ஸால் உமர் எஃபெண்டி குறிப்­பிட்­டார்.

முதல் நாளில் மாண­வர்­க­ளுக்கு ஏற்­பட்ட சிர­மம்

வீட்­டி­லி­ருந்­த­ப­டியே கல்வி பயி­லும் முறை தொடங்­கிய முதல் நாளான நேற்று காலை, கற்­றல் வளங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் 'மாண­வர் கற்­றல் தளம்' இணை­யத்­த­ளத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தில் சில மாண­வர்­கள் சிர­மத்தை எதிர்­கொண்­ட­னர்.

தொடக்­க­நிலை, உயர்­நிலைப் பள்ளிகள், தொடக்­கக்­கல்­லூ­ரி­கள், மில்­லே­னியா கல்­விக் கழ­கம், சிறப்­புக் கல்விப் பள்­ளி­கள் என அனைத்­துப் பள்ளி மாண­வர்­களும் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே கல்வி கற்­கும் முறை தொடங்­கி­யுள்ள நிலை­யில் மாண­வர் கற்­றல் தளத்­தின் பயன்­பாடு மெது­வ­டைந்­தது தெரி­யும் என கல்வி அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­தது.

"அத­னைத் தொடர்ந்து கூடு­தல் கணினி வளங்­க­ளைச் செயல்­ப­டுத்­திய பிறகு காலை 9.30 மணி­ய­ள­வில் தளம் பழை­ய­படி பயன்­பாட்­டுக்கு வந்­தது," என அறிக்கை குறிப்­பிட்­டது.

நேற்று முதல் பள்­ளி­களில் இந்­தத் தவ­ணைக்­காலம் நிறை­வு­றும் நாளான, இம்­மா­தம் 28ஆம் தேதி வரை மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்த படியே கல்வி கற்­பார்­கள்.

ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் மாண­வர்­

க­ளுக்­கும் இடை­யூ­ற்றைக் குறைக்­கும் நோக்­கில் கற்­றல் கட்­ட­மைப்­பின் செயல்­பாட்டை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.

கற்­றல் இணை­யத் தளத்­துக்­குள் நுழைய தொடர்ந்து முயற்சி செய்­த­தாக அவர்­கள் குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் வீட்­டி­லி­ருந்­த­படி கல்வி பயி­லும் நிலை ஏற்­பட்­ட­போ­தும் இந்­தக் கற்­றல் இணை­யத் தளப் பயன்­பாட்­டில் இது­போன்ற பிரச்­சி­னை­கள் இருந்­தன. அதி­க­மா­னோர் அந்­தத் தளத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு ஏது­வான மாற்­றங்­க­ளைச் செய்து உட­ன­டி­யாக பிரச்­சினை சரி­செய்­யப்­பட்­டது என்று கல்வி அமைச்சு அப்­போது குறிப்­பிட்­டது.

தேவைப்­ப­டு­வோ­ருக்கு உதவி

காத்­தி­ருக்­கிறது

வீட்­டி­லி­ருந்­த­படி கல்வி பயி­லும் மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினி, இல­வச உணவு போன்­ற­வற்­றின் தேவை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என உதவி வழங்­கும் அமைப்­பு­கள் எதிர்­பார்க்­கின்­றன.

பள்­ளி­க­ளி­லி­ருந்து சில மாண­வர்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான சாத­னங்­க­ளைக் கட­னா­கப் பெற்­றுள்­ள­னர்.

வீட்­டி­லி­ருந்து கல்வி பயி­லும் கால­கட்­டத்­தில் உணர்­வு­பூர்­வ­மான ஆத­ரவு தேவைப்­ப­டு­வோ­ருக்கு உதவி நல்­க­வும் பள்­ளி­கள் தயா­ராக உள்­ளன.

எளி­தில் பாதிக்­கப்­படும் குழுக்­க­ளின் தேவை­கள் பூர்த்தி செய்­யப்­

ப­டு­வது முக்­கி­யம் என நேற்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டார்.

"இந்­தச் சவாலான கால­கட்­டத்­தில் சிர­ம­மான பின்­ன­ணி­க­ளைக் கொண்ட பிள்­ளை­கள் பின் தங்­கி­வி­டா­மல் இருக்க உத­வும் பொருட்டு அதி­க­மான சமு­தாய சேவை முக­வை­கள் அதி­பர் சவால் திட்­டத்தை வலுப்­ப­டுத்த வேண்­டும்," என்­றும் அவர் தமது பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.