அமைச்சர்: உள்துறைக் குழுவின் பணியில் நம்பிக்கைதான் அடிப்படை

அமைச்சர்: உள்துறைக் குழுவின் பணியில் நம்பிக்கைதான் அடிப்படை

1 mins read
f6f6163b-cb18-4541-9837-60152b2ff59e
-

உள்­து­றைக் குழு­வின் பணி­களில் நம்­பிக்­கை­தான் 'அடிப்­படை நாண­யம்' என உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் நேற்று கூறி­னார்.

பொது­மக்­கள் கண்­ணோட்­டக் கருத்­தாய்வு 2021ல் பங்­கேற்­ற­வர்­களில் 91 விழுக்­காட்­டி­னர் உள்­து­றைக் குழுவைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் தங்­க­ளது பணியை நேர்மை, சார்­பின்மை போன்ற பண்­பு­க­ளு­டன் நிபு­ணத்­து­வத்­துவ முறையில் மேற்­கொள்­வ­தா­கக் குறிப்­பிட்­ட­னர். அவர்­கள் தங்­கள் பணி­யைத் திறம்­பட செய்து சிங்­கப்­பூ­ரைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கின்­ற­னர் என ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் 92 விழுக்­காட்­டி­னர் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

"பொது­மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெறு­வது என்­பது பிர­ப­ல­மான முடி­வு­களை எடுப்­பது என்­ப­தல்ல. பல­த­ரப்­பட்ட மக்­க­ளுக்கு நன்­மை­ப­யக்­கக்­கூ­டிய கடி­ன­மான முடி­வு­களை எடுக்­கத் தயா­ராக இருப்­ப­தையே அது குறிக்­கும்," என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அதி­கா­ரி­க­ளுக்­குப் பதவி உயர்வு வழங்­கும் மெய்­நி­கர் நிகழ்ச்சி ஒன்­றில் பேசி­ய­போது அமைச்­சர் இவற்­றைக் குறிப்­பிட்­டார்.

பதவி உயர்வு பெற்­ற­வர்­களில் 4,063 பேர் உள்­து­றைக் குழு­வின் துறை­களில் முழு­நேர அதி­கா­ரி­க­ளா­கப் பணி­பு­ரி­ப­வர்­கள்.

மேலும் 2,096 பேர் சிங்­கப்­பூர் போலிஸ் படை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த தேசிய சேவை­யா­ளர்­கள். எஞ்­சிய 121 பேர் தொண்­டூ­ழி­யர் பிரி­வு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

வலு­வான தலை­மைத்­து­வம், பொது­மக்­கள் நம்­பிக்கை, வலு­வான வேலை­யிட கலா­சா­ரத்தை உரு­வாக்­கு­வது, வலு­வான தலை­வர்­களை உரு­வாக்­கு­வது போன்­ற­வற்­றின் முக்­கி­யத்­து­வம் பற்­றி­யும் அவர் பேசி­னார்.

கொரோனா தொற்­றுக் கால­மான கடந்த ஆண்­டில் உள்­து­றைக் குழு சிறப்­பா­கச் செயல்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், வரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் தொழில்­நுட்­பத்­து­டன் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு உள்­து­றைக் குழு உரு­மாற்­றம் பெறும் என்­றார்.