மரண தண்டனையிலிருந்து தப்பிய மலேசிய பேருந்து ஓட்டுநர்

மரண தண்டனையிலிருந்து தப்பிய மலேசிய பேருந்து ஓட்டுநர்

2 mins read
6f7c2a32-7b48-4a19-a373-f286d38195a2
-

போதைப்­பொ­ருள் தொடர்­பான குற்­ற­வாளி என சந்­தே­கிக்­க­பப்­டும் பெண் ஒரு­வர் தம்­மி­டம் இரண்டு பொட்­ட­லம் ஹெரா­யின் போதைப்­பொ­ரு­ளைக் கொடுத்­தார் என மலே­சிய பேருந்து ஓட்­டு­நர் ஒரு­வரை அடை­யா­ளம் காட்­டி­னார். ஆனால் அந்த ஓட்­டு­நர் குற்­ற­மற்­ற­வர் என உயர் நீதி­மன்­றம் நேற்று தீர்ப்­ப­ளித்­த­தை­ய­டுத்து அவர் மரண தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பி­னார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி சிங்­கப்­பூ­ருக்கு பேருந்து ஓட்டி வந்த மங்­க­ல­கிரி துருவ குமார், 50 எனும் அந்த ஆட­வர் சாந்தி கிருஷ்­ணன் எனும் பெண்­ணி­டம் ஹெரா­யின் போதைப்­பொ­ருள் இருந்த பையைக் கொடுத்­த­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டது.

அவர் போதைப்­பொ­ரு­ளைக் கொடுத்­தார் என்­ப­தற்­கான சான்­றாக சாந்­தி­யின் வாக்­கு­மூ­லம் மட்­டுமே இருப்­ப­தாக நீதி­பதி வேலரி தியன் தனது தீர்ப்­பில் எழு­தி­யி­ருந்­தார். ஆனால், சாந்­தி­யின் வாக்­கு­மூ­லச் சான்று நம்­பக்­கூ­டி­ய­தாக இல்லை என்­றும் நீதி­பதி முடிவு செய்­தார்.

அப்­போது நடந்­த­வை­களை சாந்­தி­யால் முழு­மை­யாக நினை­வு­கூர முடி­ய­வில்லை என்று நீதி­பதி தியன் குறிப்­பிட்­டார். கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் கைதான பிறகு போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­க­ளி­டம் கூறி­ய­தற்­கும் நீதி­மன்­றத்­தில் சாந்தி கூறி­ய­தற்­கும் மிகுந்த வேறு­பாடு இருப்­ப­தை­யும் அவர் சுட்­டிக்காட்­டி­னார்.

சாந்தி, மங்­க­ல­கிரி ஆகிய இரு­வ­ரி­டையே கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்­ரல் 19, மே 16 தேதி­களில் ஆறு முறை நிகழ்ந்த தொலை­பேசி உரை­யா­டல்­கள் தொடர்­பான ஆதா­ரங்­களை அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர்­கள் சமர்ப்­பித்­த­னர்.

ஆனால், சாந்தி , மங்­க­ல­கிரி ஆகிய இரு­வ­ரும் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் பரிச்­ச­ய­மா­ன­வர்­கள் என்­பதை மட்­டுமே இந்த ஆதா­ரங்­கள் காட்­டு­வ­தா­கத் தெரி­வித்­தார். சாந்தி கைதான பிறகு அடை­ய­ளம் கண்­ட­றி­யப்­ப­டாத ஒரு­வ­ரு­டன் மங்­க­ல­கிரி சந்­தே­கத்­துக்கு உரிய வகை­யில் பல­முறை தொலை­பேசி வழி பேசி­ய­தை­யும் அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர்­கள் சுட்­டிக்­காட்­டி­னர். அவ்­வாறு நெடு­நே­ரம் பேசிய நபர் யார் என்­பது தமக்­குத் தெரி­யாது என மங்­க­ல­கிரி குறிப்­பிட்­டதை நம்­பு­வது கடி­னம் என்­றும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

ஆனால், மங்­க­ல­கிரி சாந்­தி­யி­டம் போதைப்­பொ­ருள் வழங்­கி­னார் என்­பதை நிரூ­பிக்க சூழ்­நி­லைச் சான்­று­கள் போது­மா­ன­தாக இல்லை என்று நீதி­பதி கூறி­னார்.

"என்­னு­டைய தீர்ப்­பின்­படி, மங்­க­ல­கிரி மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு சந்­தே­கத்­துக்கு இட­மில்­லா­த­படி நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை," என்று நீதி­பதி தியன் குறிப்­பிட்­டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி அங் மோ கியோ ஸ்தி­ரீட் 61ல் சாந்­தியை மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர். அவ­ரி­டம் $8,200 ரொக்­கம் இருந்­தது. அவர் போதைப்­பொ­ரு­ளைக் கொடுத்த ஸைனு­தீன் முகம்­மது என்­ப­வ­ரை­யும் போலி­சார் கைது செய்­த­னர்.

ஸைனு­தீனின் வீட்டு குப்­பைத் தொட்­டி­யி­லி­ருந்து 22.73 கிராம் ஹெரா­யின் போதைப்­பொ­ருளை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர். சாந்தி, ஸைனு­தீன் ஆகி­யோர் மீதான குற்­றம் கடந்த 2016ஆம் ஆண்டு செப்­டம்­ப­ரில் நிரூ­பிக்­கப்­பட்­டது. சாந்தி ஆயுள் தண்­டனை அனு­ப­வித்து வரு­கி­றார். ஸைனு­தீ­னுக்கு மரண தண்­டனை நிறைவேற்றப்பட்டது.