முக்குளிப்பாளர் மரணம்: கண்காணிப்பாளருக்கு 2 ஆண்டு சிறை

2 mins read
ade8c6ef-8514-4bcd-aa83-506709ba4610
-

கப்­பல் சுத்­தப்­ப­டுத்­தும் பணி­களில் ஈடு­பட்டு வரும் நிறு­வ­னத்­தின் முக்­கு­ளிப்­பா­ளர் கண்­கா­ணிப்­பா­ளர் ஒரு­வ­ருக்கு நேற்று நீதி­மன்­றம் இரண்டு ஆண்­டுச் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.

அவ­ரி­டம் பணி­பு­ரிந்த முக்­கு­ளிப்­பா­ளர் ஒரு­வர் பாது­காப்­புக் குறை­பா­டு­க­ளால் இறந்தார்.

கட­லுக்­குள் முக்­கு­ளிக்க 2 முக்­கு­ளிப்­பா­ளர்­களை அனுப்­பு­வது ஆபத்­தானது என்று அறிந்­தும் இ்த்திட்­டத்தை முன்­மொ­ழிந்­தார்.

முக்­கு­ளிப்­பா­ளர் சீட் சூன் ஹெங் என்­ப­வர் கட­லுக்­குள் முக்­கு­ளிப்புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அவ­ரின் பாது­காப்­புக் குறித்து அறி­வ­தற்­கா­கப் பொருத்­தப்­பட்­டி­ருந்த காணொளி மூலம் கண்­கா­ணிக்­கத் தவ­றி­விட்­டார்.

முக்­கு­ளிப்­பா­ளர் கட­லுக்­குள் இருந்து உத­வி­கோரி கத­றி­யதை இவர் கவ­னிக்­கத் தவ­றி­விட்­டார்.

திரு சீட் மர­ண­ம­டைய கார­ண­மாக இருந்த கண்­கா­ணிப்­பா­ள­ரான ரேடன் ரோஸ்­லான் முக­ம­து­வுக்கு உத­விய குற்­றச்­சாட்டை நீதி­மன்ற விசா­ர­ணை­யில் ஸல்­கர்­னைன் ஒத்­துக்­கொண்­டார். அத்­து­டன் 2017ம் ஆண்டு இறு­தி­யில் இந்த வேலை­யில் சேர்­வ­தற்கு, போலிச் சான்­றி­தழ்­கள், அடை­யா­ளங்­களை அளித்­த­தாக அவர் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டை­யும் நீதி­மன்­றத்­தில் ஒத்­துக்­கொண்­டார்.

ஸல்­கர்­னைன் தகு­தி­யான முக்­கு­ளிப்­பா­ள­ராக இருந்­தா­லும் அவர் போலிச் சான்­றி­தழ்­க­ளைச் சமர்ப்­பித்து முக்­கு­ளிப்­பா­ளர் கண்­கா­ணிப்­பா­ள­ரா­கப் பணி­யில் சேர்ந்­தார்.

ரேடன் ரோஸ்­மா­னுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 2018ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி, நண்­ப­கல் நேரத்­தில் மேற்­பார்­வை­யா­ளர் ரேடன் கேட்­டுக்­கொண்­ட­தால் திரு சீட், கட­லுக்­குள் முக்­கு­ளித்து கப்­ப­லின் ஒரு பகு­தி­யைச் சுத்­தம் செய்தார்.

அப்­போது நீரோட்­டத்­தில் சிக்­கிக்­கொண்ட திரு சீட் உதவி கேட்டு கத­றி­யதை ஸல்­கர்­னைன், திரை­யில் பார்க்­கத் தவ­றி­விட்­டார் என்று கூறப்பட்டது.