இந்தோனீசிய தொழிலதிபருக்கு $480,000 அபராதம்

இந்தோனீசிய தொழிலதிபருக்கு $480,000 அபராதம்

1 mins read
d6a9bf8d-32e6-42c9-bcc7-561a2207d018
-

இந்­தோ­னீ­சியத் தொழி­ல­தி­பர் கிறிஸ் விலு­வன் பங்­குச் சந்தை மோச­டி­யில் ஈடு­பட்­ட­தாக அவர் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு நேற்று நீதி­மன்­றத்­தில் விசா­ரிக்­கப்­பட்­டது. அந்த வழக்­கில் கேஎஸ் எனர்ஜி நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வா­கி­யான திரு கிறிஸ், பங்­குச் சந்தை மோச­டி­யில் ஈடு­பட்­ட­தாக தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள மூன்று குற்­றச்­சாட்­டு­களை ஒத்­துக்­கொண்­டார். அத­னை­ய­டுத்து நீதி­மன்­றம் அவ­ரது நிறுவனத்துக்கு $480,000 அப­ரா­தம் விதித்து தீர்ப்­ப­ளித்­தது.

பாது­காப்பு மற்­றும் வரு­நிலை வணி­கச் சட்­டத்தை மீறி­ய­தாக அவர் மீது 112 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. அவ­ரது நிறு­வ­னம் கடல்­சார்ந்­தும் கட­லுக்கு அப்­பா­லும் வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டது. அப்­போது தவ­றான முறை­யில் சட்­டத்­திற்கு விரோ­த­மா­க­வும் பங்­குப் பரி­வர்த்­த­னை­கள் தொடர்­பான மோச­டிப் பத்­தி­ரங்­கள் கையா­ளப்­பட்­ட­தன் தொடர்­பி­லும் அவர் மீது வழக்கு தொட­ரப்­பட்­டது.

இந்­தோ­னீ­சி­யா­வின் செல்­வந்­தர்­கள் பட்­டி­ய­லில் திரு கிறிஸ் விலு­வன் 40வது இடத்­தில் உள்­ள­தாக 2009ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளி­யிட்ட செல்­வந்­தர் பட்­டி­ய­லில் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.