தொடக்கநிலை 6 மாணவருக்கு கொவிட்-19: வகுப்பு நண்பர்கள் தனிமைப்படுத்தப்படுவர்

தொடக்கநிலை 6 மாணவருக்கு கொவிட்-19: வகுப்பு நண்பர்கள் தனிமைப்படுத்தப்படுவர்

1 mins read
f8662649-5874-4ac5-8621-171665fde3ba
-

ஆங்­கிலோ-சீனப் பள்­ளி­யில் (ஜூனி­யர்) தொடக்­க­நிலை ஆறு மாண­வர் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 இருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. இந்­நி­லை­யில், மாண­வ­ரு­டன் அணுக்­க­மான தொடர்­பில் இருந்த அவ­ரின் வகுப்பு நண்­பர்­களும் தனி­மைப்­படுத்­தப்­ப­டு­வர் என்று அறி­யப்­ப­டு­கிறது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரு­டன் தொடர்­பில் இருந்த அந்த மாண­வர், கடை­சி­யாக திங்­கட்­கி­ழ­மை­யன்று பள்­ளிக்­குச் சென்­றி­ருந்­தார்.

மாண­வ­ரின் வகுப்பு நண்­பர்­களின் பெற்­றோ­ரு­டன் சுகா­தார அமைச்சு தொடர்­பு­கொண்டு அவர்­க­ளு­டைய பிள்­ளை­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று தெரி­வித்­த­தாக கூறப்­ப­டு­கிறது.

தங்­க­ளின் பிள்­ளை­க­ளு­டன் பெற்­றோர்­களும் செல்­வர் என்­றும் அவர்­கள் ஹோட்­டல் ஒன்­றுக்­குக் கொண்டு செல்­லப்­ப­டக் காத்­திருந்­தார்­கள் என்­றும் நேற்­றைய நில­வரத்­தில் கூறப்­பட்­டது.

பெயர் குறிப்­பிட விரும்­பாத பெற்­றோர் பகிர்ந்­து­கொண்ட தக­வலின்­படி, அக்­கு­றிப்­பிட்ட வகுப்­பில் 31 மாண­வர்­கள் உள்­ள­னர் என்று கூறப்­ப­டு­கிறது.

தமக்கு வழங்­கப்­பட்ட கடி­தம் ஒன்­றில், தம்­மு­டைய மகன் திங்­கட்­கி­ழமை தொடங்கி மே 31 வரை கட்­டாய விடுப்­பில் இருக்க வேண்­டும் என்­றும் அந்தக் காலத்­தில் வீட்­டி­லேயே முடிந்த வரை இருக்க வேண்­டும் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டது. திங்­கட்­கி­ழமை, செவ்­வாய்க்­கி­ழமை இரு தினங்­க­ளி­லும் ஆண்டிடைத் தேர்வு கார­ண­மாக தம் மகன் பள்ளிக்குச் சென்­ற­தா­க­ அந்த பெற்­றோர் கூறி­னார்.

இதற்­கி­டையே, பள்ளி வளா­கத்­தைச் சுத்­தம் செய்­யும் பணி மும்­மு­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டது என்று பள்ளி தெரி­வித்­துள்­ளது. கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்ட மாண­வரு­டன் தொடர்­பில் இருந்த ஆசி­ரி­யர்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டுள்­ள­னர்.