கொவிட்-19 பரவலால் மீண்டும் இணையம் வழியாக பதிவு நடத்தப்படும் ஜூன் 30 முதல் தொடக்கநிலை 1 பதிவு

கொவிட்-19 பரவலால் மீண்டும் இணையம் வழியாக பதிவு நடத்தப்படும் ஜூன் 30 முதல் தொடக்கநிலை 1 பதிவு

2 mins read
443819c7-3c16-40d3-8c77-1c4b2e250a47
-

பிள்ளைகள் அடுத்த ஆண்டு தொடக்­க­நிலை ஒன்­றில் சேர்­வ­தற்­கான பதிவு வரும் ஜூன் 30ம் தேதி தொடங்­கும். கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் இந்த ஆண்­டும் பதிவு இணை­யம் வழி­யாக நடை­பெ­றும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

தொடக்­கப் பள்ளி முதல் வகுப்­புக்கு பதி­யும் நடை­முறையை கல்வி அமைச்சு தற்போது மறுஆய்வு செய்து வருகிறது. அந்த மறு­ஆய்­வால், இவ்­வாண்­டுக்­கான பதிவில் மாற்றம் இருக்காது என்று அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறி­யது.

அந்த மறு­ஆய்­வில், பொதுப் பிரி­வான கட்­டம் 2சியில் எவ்­வாறு அதிக இடங்­களை ஒதுக்­க­லாம் என்று கல்வி அமைச்சு ஆராய்­கிறது.

பள்­ளி­களில் சேர்வதற்கு எவ்வித முன்­னு­ரிமையும் இல்­லா­மல், வீட்­டுக்­கும் பள்­ளிக்­கும் இடை­யி­லான தூரத்­தின் அடிப்­ப­டை­யில் மாண­வர்­க­ளுக்கு பள்­ளி­களில் இடம் கிடைக்­கும் பிரிவு அது.

மேலும், சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொடக்­க­நிலை முதல் வகுப்­புக்­கான பதிவு முழுமையாக இணை­யத்தின் வழி நடை­பெ­று­கிறது.

பிள்­ளை­கள் எந்த கட்­டத்­தின் கீழ் வருவார்கள் என்­ப­தைப் பொருத்து இரண்டு வழி­களில் பெற்­றோர் அவர்­க­ளைப் பள்­ளி­யில் சேர்க்க பதி­ய­லாம்.

முதல் கட்டத்தில் இணைய விண்­ணப்­பப் படி­வம் வழி­யாக பிள்­ளை­களை எவ்­வாறு பதி­வது என்று பள்­ளி­களே பெற்­றோ­ருக்கு மேல்­வி­வ­ரம் தெரி­விக்­கும். அது, ஏற்­கெ­னவே ஒரு பிள்ளை படித்­துக்­கொண்டிருக்கும் பள்­ளி­யில், இளைய பிள்­ளை­க­ளை பதிவதற்கான பிரிவு. அத்­து­டன், தொடக்­க­நிலை ஒன்று பதிவு நடை­மு­றை­யைப் பற்றி தக­வல்­க­ளைப் பெற, பெற்­­றோர் கல்வி அமைச்­சின் பேரன்ட்ஸ் கேட்வே (Parents Gateway) செய­லியை பதி­வி­றக்­கம் செய்யலாம்.

தொடக்கநிலை 1 பதி­வுக்­குத் தேவை­யான அம்­சங்­கள், பள்ளி தொடங்­கும் முன்­னர் ஆயத்தமாக வேண்­டி­யவை போன்றவை பற்­றிய தக­வல்­க­ளை­யும் அதில் பெறலாம்.