வீட்டிலிருந்தபடியே கல்வி கற்பிப்பது, கற்பது போன்றவற்றில் சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு பள்ளிகளும் சரி, மாணவர்களும் சரி நல்ல தயார்நிலையில் உள்ளனர் என்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது சென்ற ஆண்டு நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்தின்போது பெற்ற அனுபவத்தின் பலன் என்று அவர்கள் கூறினர்.
மாணவர்கள் வீட்டிலிருந்தபடி கல்வி கற்க வேண்டும் என்ற அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமைதான் வந்தது என்றாலும் பள்ளிகள் இதை நடைமுறைப்படுத்த, அனுபவத்தின் பயனாக தயார்நிலையில் இருந்த தாகக் கூறப்பட்டது.
இதில் வழக்கமான பாடங்களுடன் தேர்வுகளுக்குப் பிந்திய, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளும் மெய்நிகர் கற்றல் முைறயில் கற்பிக்கப்படலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
'லேர்னிங் லேப்' எனும் துணைப்பாட வகுப்புகளை நடத்தும் தனியார் அமைப்பின் வாயிலாக பல தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கொவிட்-19 ேநாய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முதல் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே கல்வி கற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி, ஹில்குரோவ் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏஞ்சலின் டான், நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டிலிருந்தபடி கல்வி கற்கும் திட்டம் தமது பள்ளியில் இருப்பதாகக் கருத்துக் கூறினார். அத்துடன், இ்த்திட்டம் தொடர்ச்சியாக இவ்வாண்டு ஏப்ரல் 16லிருந்து இம்மாதம் 12ஆம் தேதி பள்ளிக்காலத்திலும் நடைமுைறயில் இருந்ததாகக் கூறினார்.
அத்துடன், பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த தகவல்களின் அடிப் படையில் ஏழு மாணவர்களுக்கு கூடுதல் உதவி தேவைப் படுகிறது என்பதையும் தமது பள்ளி கண்டறிந்ததாக அவர் விளக்கினார்.
இந்த மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புவர் என்றும் இவர்களை ேமற்பார்வையிட ஒரு தனிக்குழு அமைக்கப் பட்டுள்ளது என்றும் திருவாட்டி டான் சொன்னார்.

