தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வட்டப் பாதையில் உச்ச நேரத்தின்போது ரயில் சேவை தாமதம்

1 mins read
d10bd436-3a57-4d8c-8b65-7568fb77ff80
சிராங்கூன் ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை 7.52 மணிக்குக் காணப்பட்ட பயணிகள் கூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

லோரோங் சுவான் - கால்­டி­காட் நிலை­யங்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட சமிக்ஞை கோளாற்­றால் வட்ட ரயில் பாதை­யில் நேற்­றுக் காலை உச்ச நேரத்­தின்­போது சேவை தாம­தத்­தைப் பய­ணி­கள் எதிர்­கொள்ள நேர்ந்­தது.

தாம­தம் குறித்து காலை 6.36 மணிக்கு ஃபேஸ்புக் வழி­யா­கப் பதி­விட்ட எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம், "பழு­தைச் சரி­செய்ய எங்­கள் பொறி­யா­ளர்­கள் ஈடுட்டு வரு­கின்­ற­னர். ரயில்­கள் மிகக் குறை­வான வேகத்­தில் இயங்கி வரு­கின்­றன," என்று தெரி­வித்­தது.

ரயில் சேவை தாமதம் ஒரு மணி நேரம் நீடித்தது.

பின்­னர் 7.30 மணி­ய­ள­வில், "ரயில் சேவை­கள் மீண்­டும் தொடங்கி­விட்­டன. இல­வச இணைப்­புப் பேருந்து சேவை­கள் நிறுத்­தப்­பட்டு விட்­டன. காலை நேரப் பய­ணத்­தின்­போது ஏற்­பட்ட பாதிப்­பிற்­காக வருந்­து­கி­றோம்," என்று தனது டுவிட்­டர் பக்­கத்­தில் எஸ்­எம்­ஆர்டி பதி­விட்­டது.

சேவை தாம­தத்­தின்­போது, சிராங்­கூன் - ஃபேரர் ரோடு நிலை­யங்­க­ளுக்கு இடை­யி­லான பய­ணத்­திற்­குக் கூடு­தல் நேரம் ஆக­லாம் என்று ரயில்­க­ளி­லும் பாதிக்­கப்­பட்ட நிலை­யங்­க­ளி­லும் எஸ்­எம்­ஆர்டி அறி­வித்­த­படி இருந்­தது.

பாய லேபார்-போன விஸ்தா நிலை­யங்­க­ளுக்கு இடையே இல­வச இணைப்­புப் பேருந்­து­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தது.

இருப்­பி­னும், இணைப்­புப் பேருந்து சேவை­க­ளைக் காண முடி­ய­வில்லை என்று பாதிக்­கப்­பட்ட பய­ணி­களில் சிலர் சமூக ஊட­கம் வழி­யா­கத் தங்­க­ளது மனக்­கு­றை­யினை வெளிப்­ப­டுத்­தி­னர்.