தேசிய அளவில் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 'தங்கமுனை' விருதுப் போட்டி மீண்டும் வந்துவிட்டது.
தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய நான்கு மொழிகளிலும் சிறுகதை, கவிதை இரு பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் இப்போட்டியில் எழுத்தார்வம் உடையவர்கள் பங்கேற்கலாம்.
சுவாரசியமான கதைகளும் வெளியிடப்படாத கவிதைகளும் தங்களிடம் இருந்தால் உடனே தேசிய படைப்பிலக்கியப் போட்டிக்கு அனுப்பிவையுங்கள். இப்போட்டி பல நல்ல எழுத்தாளர்களை அடையாளம் கண்டு உருவாக்கியுள்ளது.
விதிமுறைகளும் பரிசுகளும்
பங்கேற்க விரும்புபவர்களின் படைப்புகள், நாளிதழ், சஞ்சிகை, தொகுப்புகளில் வெளியாகி இருக்கலாம். ஆனா, நூல் வெளியிட்டு இருக்கக்கூடாது.
இவ்வாண்டு தேசிய கலைகள் மன்றமும் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியமும் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இப்போட்டியில் பங்கேற்கலாம். கவிதை, சிறுகதை என இரு பிரிவுகளிலும் ஒருவர் கலந்துகொள்ளலாம். சிறுகதை 5,000 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கவிதைப் போட்டிக்கு குறைந்தது ஐந்து கவிதைகளை அனுப்ப வேண்டும். ஒரு விண்ணப்பத்துடன் எட்டுக் கவிதைகள் வரை அனுப்பலாம்.
நான்கு மொழிகளிலும் கவிதை, சிறுகதை இரு பிரிவுகளிலும் பரிசு வழங்கப்படும்.
முதல் பரிசு: $7,000 ரொக்கம், சான்றிதழ் மற்றும் கிண்ணம்.
இரண்டாம் பரிசு: $5,000 ரொக்கமும் சான்றிதழும்.
மூன்றாம் பரிசு: $3,000 ரொக்கமும் சான்றிதழும்.
போட்டி விதிமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கும் விண்ணப்பப் படிவத்திற்கும் https://artshouselimited.sg/gpa எனும் இணையப்பக்கத்தை நாடவும்.
விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: gpa@artshouse.sg, தொலைபேசி எண்: 8246 0877.
இவ்வாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதிக்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும்.