பணிப்பெண்கள் வீட்டிலேயே இருக்க அமைச்சு வலியுறுத்து

பணிப்பெண்கள் வீட்டிலேயே இருக்க அமைச்சு வலியுறுத்து

2 mins read
e75dfacd-e02e-4991-a59e-b65e67592f0d
-

புதிய கொவிட்-19 விதி­மு­றை­கள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடப்­புக்கு வந்­தது முதல் பணிப்­பெண்­கள் அதி­க­மா­கக் காணப்­படும் பகு­தி­களில் அதி­கா­ரி­கள் சோத­னையை அதி­கப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

இது தொடர்­பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளி­யிட்ட மனி­த­வள அமைச்சு, பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களை மீறும் பணிப்­பெண்­கள் மீது அம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று தெரி­வித்­தது.

தற்­போது எழுந்­தி­ருக்­கும் கொவிட்-19 சூழ்­நிலை கார­ண­மாக ஓய்வு நாட்­களில் பணிப்­பெண்­கள் அனை­வ­ரும் வீட்­டி­லேயே இருக்­கு­மாறு அமைச்சு வலி­யு­றுத்தி உள்­ளது.

இருப்­பி­னும் அவ்­வாறு ஓய்வு நாட்­களில் வீட்­டில் தங்கி இருக்­கும்­போது அவர்­க­ளுக்கு வேலை எது­வும் தரக்­கூ­டாது என்­றும் அமைச்சு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்டு உள்­ளது.

"வீட்­டி­லேயே ஓய்­வைக் கழிப்­பது தொடர்­பாக முத­லா­ளி­கள், பணிப்­பெண்­கள் இடை­யில் இரு­த­ரப்பு ஒப்­பந்­தம் செய்­து­கொள்ள முன்­வர வேண்­டும். ஓய்வு நாளில் வேலை செய்­தால் அதற்­கான இழப்­பீட்டை முத­லா­ளி­கள் தரவேண்­டும்," என்று அது தெரி­வித்து உள்­ளது.

ஒரு­வேளை அத்­தி­யா­வ­சி­யக் கார­ணங்­க­ளுக்­காக பணிப்­பெண்­கள் வெளி­யில் செல்ல நேர்ந்­தால் அந்­தப் பய­ணத்தை சுருக்­க­மாக முடித்­துக்­கொள்­ள­வும் கூட்­ட­மான பகு­தி­களை அவர்­கள் தவிர்க்க வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு உள்­ளது.

"குழுக்­க­ளு­டன் அவர்­கள் ஒன்று­ க­லக்­கவோ சாப்­பாடு, பானங்­கள் அல்­லது பாத்­தி­ரங்­கள் போன்­ற­வற்­றை பகிர்ந்­து­கொள்­ளவோ கூடாது," என்­பது அமைச்­சின் வலி­யு­றுத்து.

அண்­மைய சமூ­கத் தொற்­று­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்­தில் நாடு ஈடு­பட்டு இருக்­கும் வேளை­யில் வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று ஏற்­ப­டு­வ­தும் நிகழ்ந்து வரு­கிறது. சமூ­கத்­தொற்­று­களில் அவர்­களும் அவ்­வப்­போது இடம்­பெறு­கின்­ற­னர்.

உதா­ர­ண­மாக, நேற்று முன்தி­னம் உறுதி செய்­யப்­பட்ட 27 சமூ­கத் தொற்­று­களில் 32 வயது பிலிப்­பீன்ஸ் பணிப்­பெண் ஒரு­வ­ரும் அடங்­கு­வார்.

அதற்கு முந்­திய நாளான புதன்­கி­ழமை சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட பட்­டி­ய­லில் இரு பணிப்­பெண்­களும் இடம்­பெற்று இருந்­த­னர். செவ்­வாய்க்­கி­ழ­மை­யும் ஒரு பணிப்­பெண்­ணுக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

சமூக இடை­வெ­ளி­யைக் கடு­மை­யா­கப் பின்­பற்ற வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தைப் பணிப்­பெண்­கள் புரிந்­து­கொள்ள அவர்­க­ளுக்கு அவர்­ க­ளின் முத­லா­ளி­கள் உதவ வேண்­டும் என்­றும் அமைச்சு கூறி­யுள்­ளது.

'அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியில் சென்றால் விரைந்து திரும்பிவிட வேண்டும்'