மேலும் 29 பேர் பாதிப்பு

மேலும் 29 பேர் பாதிப்பு

2 mins read
c1d68be5-1272-475b-bde2-0128f526b88d
-

தொடர்பில்லாத எட்டுப் பேர் உட்பட சமூகத்தில் 22 பேருக்குத் தொற்று

சமூக அள­வில் 22 பேர் உட்­பட நேற்று புதி­தாக 29 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சமூ­கத்­தில் கொரோனா தொற்றி­யோ­ரில் எட்­டுப் பேருக்கு முன்­னர் கிருமி தொற்­றிய எவ­ரு­ட­னும் தொடர்­பில்லை. எஞ்­சிய 14 பேர் முன்­னர் கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். அவர்­களில் 12 பேர் ஏற்­கெ­னவே தனிமை உத்­த­ர­வின்­கீழ் வைக்­கப்­பட்­டு­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த எழு­வருக்­குத் தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் இங்கு வந்­த­தும் கட்­டாய இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சின் அறிக்கை கூறி­யது. அவர்­களில் மூவர் சிங்­கப்­பூரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடு­தி­களில் புதி­தாக எவ­ரை­யும் கொரோனா தொற்­ற­வில்லை. இதை­ய­டுத்து, சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் மொத்த எண்­ணிக்கை 61,799ஆக உயர்ந்துவிட்டது.

பள்­ளி­யில் முதல் பாதிப்பு பதிவு

இத­னி­டையே, சிங்கப்பூரில் பள்­ளி­யில் கொரோனா பர­விய முதல் சம்­ப­வம் பதி­வாகி இருக்­கிறது.

நேற்று முன்­தி­னம் சமூக அள­வில் பதி­வான கொரோனா பாதிப்பு­களில் ஆங்­கிலோ- சீனப் பள்ளி (ஜூனி­யர்) மாண­வ­ரும் ஒரு­வர்.

அந்த 11 வய­துப் பையன், கடந்த புத­னன்று கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்த இன்­னொரு மாண­வரின் வகுப்­புத் தோழன் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

சக மாண­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னதை அடுத்து, மறு­நாள் வியா­ழக்­கி­ழமை அந்த 11 வயது மாண­வர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார். அதே நாளில் காய்ச்­ச­லா­லும் இரு­ம­லா­லும் அவர் பாதிக்­கப்­பட்­டார். இந்த அறி­கு­றி­களை அடுத்து, அவ­ருக்கு கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

மறு­நாள் வெள்­ளிக்­கி­ழமை வெளி­யான பரி­சோ­தனை முடிவு, அவரை கொரோனா தொற்­றி­யி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யது. அவ­ருக்­கான 'சிரா­லஜி' சோதனை முடிவு இன்­னும் வெளி­யா­க­வில்லை.

இதை­ய­டுத்து, "ஏசி­எஸ் ஜூனி­யர் பள்­ளி­யில் பதி­வான கொரோனா பாதிப்­பு­கள், நம் பள்­ளி­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க வேண்­டும் என்­பதை நம் அனை­வ­ருக்­கும் நம் பங்­கா­ளி­க­ளுக்­கும், குறிப்­பாக பெற்­றோர்­க­ளுக்கு மீண்­டும் தெளி­வாக நினை­வூட்­டு­வ­தாக அமைந்­துள்­ளன," என்று கல்வி அமைச்சு நேற்று ஓர் அறிக்கை மூலம் தெரி­வித்­துள்­ளது.