$1.1 மில்லியன் நன்கொடை; 767 குடும்பங்களுக்கு உதவி

$1.1 மில்லியன் நன்கொடை; 767 குடும்பங்களுக்கு உதவி

1 mins read
ad6c41a5-c9f7-46e3-9872-0b5f58306286
-

கொவிட்-19 தொற்­றால் பெரி­தும் பாதிக்­கப்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உதவ பொது­மக்­க­ளி­டம் இருந்து $1.1 மில்­லி­யன் நன்­கொடை திரட்­டப்­பட்­டது. அதன்­மூ­லம் 767 குடும்­பங்­க­ளுக்கு நிதி­யு­தவி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா தொற்­றால் வேலை போன­தா­லும் அல்­லது ஊதி­யம் குறைக்­கப்­பட்­ட­தா­லும் வசதி குறைந்த பல குடும்­பங்­கள் பெரும் சிர­மத்தை எதிர்­கொண்டு வரு­வதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் கடந்த ஆண்டு ஒரு செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

அதை­த் தொடர்ந்து, நூற்­றுக்கு மேற்­பட்ட வாச­கர்­கள் அந்த நாளி­தழைத் தொடர்­பு­கொண்டு, அந்தக் குடும்­பங்­க­ளுக்­குப் பணமாகவும் பொருளாகவும் நன்­கொடை அளிக்க விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­த­னர்.

அதையடுத்து, அவற்­றைத் திரட்டி வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு விநி­யோ­கிப்­ப­தற்­காக, சமூக சேவை அமைப்­பு­களும் அடித்­தள சமூ­கக் குழுக்­களும் இணைந்து கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்தில் 'மைண்ட் தி கேப்' எனும் அமைப்பை உரு­வாக்­கின.

'மைண்ட் தி கேப் நிதி' மூலம் பயன்­பெற்­ற­வர்­க­ளுக்கு, மாதத்­திற்கு $100 முதல் $500 வரை ஆறு மாதங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­ட­தாக அந்த அமைப்­பின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

அவ­ச­ர­கால உத­விக்­கா­க­வும் அந்­தக் குடும்­பங்­கள் விண்­ணப்­பிக்க முடி­யும். அவ்­வே­ளை­களில், அவற்­றுக்கு $100 முதல் $500 வரை ஒரு­முறை மட்­டும் வழங்­கப்­படும்.