அரசாங்கம் 2020 பிற்பாதியில் 1,630 ஃபேஸ்புக் கணக்குகளின் விவரங்களைக் கேட்டது

அரசாங்கம் 2020 பிற்பாதியில் 1,630 ஃபேஸ்புக் கணக்குகளின் விவரங்களைக் கேட்டது

1 mins read
70b0e1f7-60f1-4020-98d2-4b1b166a4e05
-

அர­சாங்­கம் சென்ற ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்­பர் மாதம் வரை­யில் 1,630 ஃபேஸ்புக் கணக்­கு­கள் தொடர்­பில் தக­வல் கேட்டு ஃபேஸ்புக் நிறு­வ­னத்­திற்கு 1,260 கோரிக்­கை­க­ளைச் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

அதற்கு முந்­தைய ஆண்­டின் இதே ஆறு மாதங்­களில் சமர்க்­கப்­பட்ட கோரிக்­கை­க­ளைக் காட்­டி­லும் சென்ற ஆண்­டின் எண்­ணிக்கை மும்­ம­டங்கு என்று கூறப்­பட்­டது.

மேலும், மற்ற ஆசி­யான் நாடு­களைக் காட்­டி­லும் சிங்­கப்­பூரே அதி­க­மான கோரிக்­கை­க­ளைச் சென்ற ஆண்டு செய்­தி­ருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட 83% தரவு கோரிக்­கை­க­ளுக்கு ஃபேஸ்புக் நிறு­வ­னம் உடன்­பட்டு வழங்­கி­ய­தா­க­வும் வியா­ழக்­கி­ழ­மை­யன்று அது வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், மோச­டிச் சம்­ப­வங்­கள் உட்­பட இணை­யக் குற்­றம் தொடர்­பில் தரவு கோரிக்கை எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தாக தொடர்பு, தக­வல் அமைச்சு குறிப்­பிட்­டது.

அனைத்­து­லக அள­வில் 191,013 தரவு கோரிக்­கை­கள் செய்­யப்­பட்­டதாகவும் கூறப்பட்டது.