கப்பல் தொட்டி ஒன்றைப் பரிசோதித்தபோது அதன் உள்ளே மயங்கி விழுந்துவிட்ட மேற் பார்வையாளர் ஒருவரைக் காப்பாற்றும் முயற்சியில் இருவர் மாண்டுவிட்டனர்.
இந்தச் சம்பவம் இம்மாதம் 19ஆம் தேதி நிகழ்ந்தது என்று வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் நேற்று செய்தி அறிக்கையில் தெரிவித்தது. சம்பவம் நிகழ்ந்த நிறுவனத்தின் பெயர் முதலான விவரங்களை அந்த மன்றம் தெரிவிக்கவில்லை.
துரப்பணக் கப்பல் ஒன்றின் தொட்டியில் முறையான பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாமல் மேற்பார்வையாளர் உள்ளே இறங்கியதாகவும் கொஞ்ச நேரத்தில் அவர் மயங்கி விழுந்துவிட்டதாகவும் அவரைக் காப்பாற்ற முயன்ற இரண்டு ஊழியர்கள் தொட்டிக்குள் விழுந்துவிட்டதாகவும் அந்த இரண்டு ஊழியரில் ஒருவர் உயிர் பிழைத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மற்ற இருவரையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்டது. ஆனால் அவர்கள் மாண்டுவிட்ட தாக மன்றம் குறிப்பிட்டது.

