ஊழி-யர்-களை வீட்-டி-லி-ருந்து வேலை செய்ய ஏற்ாபடு செய்ய தவ-றி-யது 11 நிறு-வ-னங்-க-ளுக்கு அப-ரா-தம்

ஊழி-யர்-களை வீட்-டி-லி-ருந்து வேலை செய்ய ஏற்ாபடு செய்ய தவ-றி-யது 11 நிறு-வ-னங்-க-ளுக்கு அப-ரா-தம்

2 mins read
a7affa8c-35a2-4c30-8607-2237bb3bb8ad
-

மனி­த­வள அமைச்சு மேற்­கொண்ட சோத­னை­களில் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே வேலை செய்­யக்­கூ­டிய ஊழி­யர்­களை அவ்­வாறு செய்­யச் சொல்­லாது வேலை­யி­டங்­களில் அவர்­கள் ேவலை செய்ய அனு­ம­தித்­தது தொடர்­பாக 11 நிறு­வ­னங்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மே மாதம் 8ஆம் தேதி­யி­லி­ருந்து 21ஆம் தேதி­ வரை அமைச்சு மேற்­கொண்ட சோத­னை­களில் இது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இந்த கால­கட்­டத்­தில் அமைச்சு 530க்கும் மேற்­பட்ட சோத­னை­களை மேற்­கொண்­டது.

முதல் தடவை இந்­தக் குற்­றம் புரி­வோ­ருக்கு $1,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­கிறது. மறு­முறை அப­ரா­தம் புரிந்­தால் $2,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்று அமைச்சு கூறி­யுள்­ளது.

இதன் தொடர்­பில் அமைச்சு இம்­மா­தம் 4ஆம் தேதி வெளி­யிட்ட அறிக்­கை­யில் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே வேலை செய்­யக்­கூ­டிய ஊழி­யர்­கள் வீட்­டி­லி­ருந்து வேலை செய்ய வேண்­டும் என்று கூறி­யது.

கொவிட்-19 கொள்­ளை­நோயை முறி­ய­டிக்க எடுக்­கப்­படும் பாது­காப்பு இடை­வெளி நட­வ­டிக்­கை­க­ளின் ஓர் அம்­சம் என்­றும் அதில் அமைச்சு தெரி­வித்­தி­ருந்­த­து.

அதன்­படி, ஒரு­வ­ரின் வேலை முறை கார­ண­மாக அவ­ரால் வீட்­டி­லி­ருந்­த­படி வேலை செய்ய இய­லாது என்ற நிலை இருந்­தால் மட்டுமே அவர்­கள் வேலை­யி­டங்­ க­ளுக்­குச் சென்று வேலை செய்ய வேண்­டும் என்று அமைச்சு அதில் நினை­வூட்­டி­யது.

இதன் தொடர்­பில், வேலை­யி­டங்­களில் பணி­யி­லி­ருக்­கும் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கையை இம்­மா­தம் 28ஆம் தேதிக்­குள் நிறு­வ­னங்­கள் அமைச்­சுக்குத் தெரி­விக்க வேண்­டும் என்று அது கூறி­யி­ருந்­தது. இதில் மாற்­றம் ஏதும் செய்யப்­ பட்­டால் அவற்றை உட­னுக்கு உடன் அமைச்­சுக்குத் தெரி­விக்க வேண்டு­ மென்­றும் அது விளக்­க­ம­ளித்­தி­ருந்­தது.

"ஊழி­யர்­கள் எண்­ணிக்கை என்­ன­வாக இருந்­தா­லும், வீட்­டி­லி­ருந்­த­ப­டியே வேலை செய்­யக்­கூ­டிய அனை­வ­ரும் அவ்­வாறே செய்­வதை உறு­தி­செய்­வது முத­லா­ளி­க­ளின் பொறுப்பு," என்று அமைச்சு தெரி­வித்­தது.

வேலை­யி­டங்­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கையை மீறா­மல் இருந்­தா­லும் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யக் கூடிய ஊழி­யர்­கள் வீட்­டி­லி­ருந்­து­தான் வேலை செய்ய வேண்­டும். இந்த விதியை மீறும் முத­லா­ளி­கள் தண்­டிக்­கப்­ப­டு­வர் என்று அமைச்சு தெளி­வு­ப­டுத்­தி­யது.

அத்­து­டன், வேலை­யி­டங்­களில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­கள் போது­மான பாது­காப்பு தூர இடை­வெளி நட­ வ­டிக்­கை­களைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதில் மாறு­வேலை நேரம், நீக்குப்­போக்­கான வேலை நேரம், சமூக ஒன்­று­கூ­ட­லுக்குத் தடை, ஒரு வேலை­யி­டத்­தி­லி­ருந்து இன்­னொரு வேலை­யி­டத்­துக்கு ஊழி­யர்­களை அனுப்­பா­மல் இருப்­பது போன்­றவை அடக்­கம்.

மேலும், அனைத்து நேரங்­க­ளி­லும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும் என்று நினை­வு­றுத்­தப் ­ப­டு­கிறது.