எம்-ஆர்டி ரயி-லில் ஆட-வரை கொடூ-ர-மாக தாக்-கி-ய-வர் கைது

எம்-ஆர்டி ரயி-லில் ஆட-வரை கொடூ-ர-மாக தாக்-கி-ய-வர் கைது

2 mins read
50dee3bd-04b7-4d20-9aff-127d0f4f18d3
-

டெளன்­ட­வுன் தடத்­தில் செல்­லும் ரயி­லில் ஞாயி­றன்று சக பயணியைக் கொடூ­ர­மா­கத் தாக்­கி ­ய­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

பொது வெளி­யில் தொல்லை கொடுத்­ததற்­காக தற்­பொ­ழுது கைது ெசய்­யப்­பட்­டுள்ள அந்த ஆட­வர் மீது வேண்­டு­மென்றே கடு­மை­யான காயம் விளை­வித்த குற்­றத்­திற்­கா­க­வும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் தொடர்­பில் காவல்­துை­ற­யி­னர் வெளி­யிட்ட அறிக்­கை­யில், தாக்­கு­தல் நடத்­தி­ய­வ­ருக்­கும் தாக்­கப்­பட்­ட­வ­ருக்­கும் இடையே நீண்ட வாக்­கு­வா­தம் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தத் தாக்­கு­தல் குறித்து ஞாயிறு காலை சுமார் 10.15 மணிக்கு தங்­க­ளுக்குத் தக­வல் கிடைத்­த­தாக காவல்­து­றை­யி­னர் கூறு­கின்­ற­னர்.

ஆனால், அதன் அதி­கா­ரி­கள் அங்கு சென்­ற­டை­வ­தற்­குள் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் அங்­கி­ருந்து சென்­று­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தத் தாக்­கு­தல் தொடர்­பான காணொ­ளி­யில், கீழே விழுந்­து­கி­டந்­த­வர் மீது, ஆட­வர் ஒரு­வர் தொடர்ச்­சி­யாகத் தாக்­கு­தல் நடத்­து­வது தெரி­ய­வந்­தது. அச்ச­ம­யம் ரயில் ரோச்­சோர் நிலை­யத்தை ெசன்­ற­டைந்­தது.

அதில் தாக்­கப்­பட்­ட­வர் கீழே விழுந்த நிலை­யில் அவ­ரி­ட­மி­ருந்து முன­கல் சத்­தம் கேட்­டது தெரிய வந்தது.

தற்­பொ­ழுது தாக்­கு­தல் நடத்­திய சந்­தேக நபர் அடை­யா­ளம் காணப்­பட்டு கைதாகியுள்ளார்.

இந்த சம்­ப­வம் குறித்து கருத்­து­ரைத்த எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வன தொடர்­புத் துறை­யைச் சேர்ந்த மூத்த துணைத் தலை­வர் திரு­வாட்டி டேமி டான், புக்­கிட் பாஞ்­சாங் நிலை­யத்தை நோக்­கிச் செல்­லும் ரயில் வண்­டி­யில் இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

இதைக் கேள்­விப்­பட்ட எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வன ஊழி­யர் அங்கு உடனே சென்­ற­தா­கவும் "தாக்­கப்­பட்­ட­வர் தனி­யாக இருப்­ப­தைக் கண்டு மருத்­துவ உதவி தேவையா என்று கேட்­டதாகவும் திரு­வாட்டி டேமி கூறினார்.

"அதற்கு தாக்­கப்­பட்­ட­வர் தமக்கு மருத்­துவ உதவி எது­வும் தேவை­யில்லை என்­றும் தம்­மைத் தாக்­கி­ய­வர் ரயில் வண்­டியை விட்டு இறங்­கிச் சென்­று­விட்­டார் என்றும் தெரி­வித்­தார். அவர் தாம் நல­மு­டன் இருப்­ப­தா­க மீண்­டும் கூறி­ய­து­டன் பய­ணத்­தைத் தொடர்ந்­தார்," என்று கூறி­னார்.

ரயி­லில் பாது­காப்­புக்­காகப் பொருத்­தப்­பட்­டி­ருக்­கும் புகைப்­ப­டக் காட்­சி­களை காவல்­து­றை­யி­ன­ரின் விசா­ர­ணைக்கு எஸ்­பி­எஸ் கொடுத்து உத­வும் என்­றும் திரு­வாட்டி டேமி குறிப்­பிட்­டார்.