மனைவியை பிசாசு என்று நினைத்து கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை

மனைவியை பிசாசு என்று நினைத்து கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை

2 mins read
7a6175b0-c1b2-4ffb-afe7-0bcf64f54a3d
ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கு 2016ல் குடியேறிய குவர்க், 2017ல் திருவாட்டி கூவை மணந்து அவரது மகனைத் தத்து எடுத்துக் கொண்டார். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மனை­வி­யைப் பிசாசு என்று கற்­ப­னை­செய்து கொன்ற ஆட­வ­ருக்கு பத்து ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு ஜன­வரி 3ஆம் தேதி, செங்­காங்­கில் உள்ள எஸ்­ப­ரீனா கூட்­டு­ரிமை அடுக்­கு­மாடி வீட்­டில் கொலை நடந்­தது.

49 வயது ஆஸ்­தி­ரே­லி­ய­ரான பவுல் லெஸ்லி குவர்க், 'ஸ்கிட்­ஸோ­ஃப்­ரி­னியா' மனக்­கோ­ளாற்­றால் பாதிக்­கப்­பட்டு அதற்கு மருந்து உட்­கொண்டு வந்­த­வர்.

சிங்­கப்­பூ­ர­ரான அவ­ரது மனைவி திரு­வாட்டி கிறிஸ்­டீனா கூ கெக் குவா என்­ப­வ­ரைக் கொல்­லும்­படி அவ­ருக்கு காதில் ஒலித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

மனை­வி­யைத் தற்­காப்­புக் கலைக்­குப் பயன்­ப­டுத்­தும் கம்­பால் அடித்­தும் கழுத்­தில் கத்­தி­யால் குத்­தி­யும் கொன்­றார் குவர்க்.

அவர்­க­ளது 10 மாத செல்ல நாயைக் கத்­தி­யால் குத்தி 3வது மாடி­யி­லி­ருந்து வீசி­னார்.

'பிசாசை' மீண்­டும் உயிர்த்­தெழ வைக்­கும் 'ஆவி', நாய் உரு­வில் இருந்­தது என்று அவர் நம்­பி­னார். போலிஸ் அவ்­வி­டம் வந்­த­போது, அவர் ரத்­தத்­தில் நனைந்­தி­ருந்­தார். தான் 'ஏசு கிறிஸ்து' என்று குவர்க் போலி­சா­ரி­டம் கூறி­னார்.

நோக்­க­மில்­லாத மர­ணத்தை விளை­வித்த குற்­றத்த்தை ஒப்­புக்­கொண்ட அவ­ருக்கு, 10 ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

மனக் கோளாற்­றால் அவ­ரது செயல் களுக்­காக மன­த­ள­வில் பொறுப்பு வகிக்­கும் தன்மை குறைந்­த­தாக அவர் மீதான மனோ­வி­யல் சோத­னை­கள் காட்­டின. அத­னால் கொலைக்­குற்­றம் நோக்­க­மில்­லாத மர­ணக் குற்­றச்­சாட்­டா­கக் குறைக்­கப்­பட்­டது.

கொலைக்கு முந்­திய நான்கு மாதங்­க­ளாக, குவர்க், ஸ்கிட்­ஸோ­ஃப்­ரி­னியா நோய்க்­கான மருந்­தைக் குறைத்­துக்­கொண்­டார் என்­றும் அத­னால் நோய் மீண்­டும் தலை­யெ­டுத்­தது என்­றும் நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது.

நீண்­ட­கால அனு­ம­தி­யில் சிங்­கப்­பூ­ரில் வசித்து வரும் குவர்க், பொங்­கோல் பல­துறை மருந்­த­கத்­தில் பாத­நோய் சிகிச்சை நிபு­ண­ரா­கப் பணி­யாற்­றி­னார்.

திரு­வாட்டி கூ, அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த நிர்­வாக ஆலோ­சனை நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி வந்­தார்.

குவர்க்­கின் முதல் மனை­விக்­குக் கொடுக்க வேண்­டிய ஜீவ­னாம்­சத் தொகை­யால் தம்­ப­திக்கு இடையே அடிக்­கடி தக­ராறு ஏற்­பட்­ட­தாகவும் கொலை நடந்த அன்றும் வாக்குவாதம் நடந்ததாகவும் நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது.