மாணவர்களுக்கு 'வழிகாட்ட' முனைந்த வழக்கறிஞர் கண்டிக்கப்பட்டார்

மாணவர்களுக்கு 'வழிகாட்ட' முனைந்த வழக்கறிஞர் கண்டிக்கப்பட்டார்

2 mins read
0d729f39-91ee-486d-b110-381c6b425a88
-

சட்­டத்­துறை மாண­வர்­க­ளுக்­கும் பட்­ட­தா­ரி­க­ளுக்­கும் வழி­காட்­டு­தல் வழங்­கு­வ­தா­கக் கூறி அவர்­க­ளுக்­காக இணை­யத்­த­ளத்தை நடத்­தி­வந்த வழிக்­க­றி­ஞரை சிங்­கப்­பூர் வழக்­க­றி­ஞர்­கள் சங்­கம் கண்­டித்­தி­ருக்­கிறது.

அத­னைப் பதிவு செய்து நடத்­தி­ய­வர் திரு ஆங் சொங் யீ எனும் வழக்­க­றி­ஞர். ஆங், பொது­மக்­கள் நல­னுக்கு மாறாக நடந்­த­தா­க­வும் தவ­றான தக­வல்­க­ளைத் தந்­த­தா­க­வும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை வெளி­யான அர­சி­த­ழில் கூறப்­பட்­டது.

வழக்­க­றி­ஞ­ருக்­கும் கவு­ர­வம் மிக்­கத் தொழில் செய்­ப­வ­ருக்­கும் உரிய ஏற்­பில்­லாத, தவ­றான நடத்­தை­யில் ஈடு­பட்­ட­தாக அவர் கண்­டிக்­கப்­பட்­டார்.

திரு ஆங் இன்­ன­மும் வழக்­க­றி­ஞ­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார் என்று இணை­யத்­த­க­வல்­கள் கூறு­கின்­றன.

கடந்த ஆண்டு ஏப்­ரல் 28ஆம் தேதி www.lawmentors.sg எனும் முகவரியில் இயங்கிய அந்த இணை­யத்­த­ளம் பற்றி தக­வல் பர­வி­யது. அன்றே அது முடங்­கி­யது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல், சட்­டத் துறை­யின் குறு­கல் ஆகி­ய­வற்­றால் சட்­டத் துறை பட்­ட­தா­ரி­கள் வழக்­க­றி­ஞர்­க­ளா­கப் பணி­யாற்­றும் வாய்ப்­பு­கள் குறைந்து வரு­வ­தாக அந்த இணை­யத்­த­ளம் கூறி­யது. குறிப்­பாக, புதிய வழக்­க­றி­ஞர்­களில் 65 விழுக்­காட்­டி­ன­ருக்கு வேலை கிடைக்­காது என்று இணை­யத்­த­ளத்­தில் கூறப்­பட்­டது.

அத­னால், மாண­வர்­கள் சட்ட நிறு­வ­னங்­களில் வேலை­க­ளை­யும் பணி­யி­டப் பயிற்­சி­யை­யும் பெற உத­வு­வ­தா­கக் கூறி, அதி­கக் கட்­ட­ணம் உள்ள வழி­காட்­டு­தல் திட்­டத்தை இணை­யத்­த­ளம் முன்­வைத்­தது.

அதற்கான கட்டணமாக ஆரம்பகட்ட வழக்கறிஞர்களின் ஒன்றரை முதல் இரண்டு மாதச் சம்பளம் வரை பெறப்படும் என்றும் அது கூறியது.

சட்டத் துறைப் பட்டதாரி ஒருவரின் சராசரி மாதச் சம்பளம் என்று கல்வி அமைச்சு கடந்தாண்டு நடத்திய பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய இங்குள்ள சில சட்ட நிறுவனங்கள், அந்த இணையத்தளம் பயத்தைக் கிளப்பும் சந்தர்ப்பவாத முயற்சி என்று கூறின.

சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கம் அந்த இணையத்தளம் முன்வைத்தது சான்றுகள் இல்லாத ஊகங்கள் என்று கூறியிருந்தது.