குடும்பத்தை மையமாகக் கொண்ட முதல் இளையர் மாநாடு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு மணி நேர நிகழ்வில் 20 கல்வி நிலையங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 இளையர்கள் கலந்துகொண்டனர்.
குடும்பக் கலந்துரையாடல்களில் இளையர்களை மையமாக வைப்பது முக்கியம் என்று தமது உரையில் குறிப்பிட்டார் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான்.
பின்னாளில் இதே இளையர்கள் வலுவான குடும்ப உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்குத் தேவையான வளங்களை முன்னரே வழங்கவேண்டும் என்று அவர் கூறினார்.
குடும்பத்தில் ஏற்படக்கூடிய துன்பநிலையை எதிர்கொள்ளவும் தலைமுறைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும் இளையர்கள் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று வலியுறுத்தினார் அமைச்சர்.

