இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் வளர்ச்சி கண்டுள்ளதால் நாட்டின் முக்கிய வர்த்தகம் ஏற்றுமதி ஆகியவற்றுக்கான முன்னுரைப்புகள் உயர்த்தப்பட்டுள்ளன.
எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகள் இவ்வாண்டு ஒன்றிலிருந்து மூன்று விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு அது பூஜ்யம் விழுக்காட்டிலிருந்து இரண்டு விழுக்காடு வரை மட்டுமே அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மொத்த வர்த்தகம் ஐந்திலிருந்து ஏழு விழுக்காடு வரை உயரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் முன்னுரைக்கப்பட்டிருந்த இரண்டிலிருந்து நான்கு விழுக்காடு வரையிலான வளரச்சியைவிட இது அதிகம். இவ்வாண்டின் முதல் காலாண்டில் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி ஆண்டுக்காண்டு அடிப்படையில் 9.7 விழுக்காடு அதிகரித்ததும் சிங்கப்பூர் பொருளியலின் சில முக்கிய பிரிவுகளுக்கான முன்னுரைப்புகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
மின்னணுவியல், மின்னுணு
வியல் சாரா ஏற்றுமதிகள் அதி
கரித்திருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் இந்த ஏற்றுமதிகள் ஐந்து விழுக்காடு சரிவைக் கண்டதாகவும் தற்போது நிலைமை மாறிவிட்டதாகவும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு நேற்று தெரிவித்தது.
முக்கிய மின்னணுவியல்
ஏற்றுமதிகள் முதல் காலாண்டில் 14.8 விழுக்காடு அதிகரித்தது.
தொலைத்தொடர்புச் சாதனங்
களுக்கான தேவை அதிகரித்
திருப்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னுணுவியல் சாரா ஏற்று
மதிகளும் 8.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது. சிறப்பு இயந்திரங்கள், முக்கிய ரசாயனங்கள், பெட்ரோலிய ரசாயனம் ஆகியவற்றின் ஏற்று
மதிகளின் அதிகரிப்பு இதற்கு
முக்கிய காரணம்.
இதற்கிடையே, இவ்வாண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு எண்ணெய் சார்ந்த ஏற்றுமதி ஆண்டுக்காண்டு அடிப்படையில் 19.3 விழுக்காடு சரிந்தது. ஆனால் கடந்த ஆண்டு இறுதிக் காலாண்டில் பதிவான 30.6 விழுக்காடு வீழ்ச்சியைவிட நிலைமை மேம்பட்டிருப்பதை என்டர்பிரைஸ்
சிங்கப்பூர் அமைப்பு சுட்டியது.

