தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

800 பேர் பங்கேற்ற விசாக தின மெய்நிகர் வழிபாடு

2 mins read
26b389c8-5c8c-4d6e-a074-3189e7991a32
விசாக தினத்தையொட்டி சிங்கப்பூர் பௌத்த சங்கம் முதன்முறையாக மெய்நிகர் வழி மாபெரும் தியான வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் விசாக தின வழி­பா­டு­ க­ளின் ஒரு பகு­தி­யாக இணை­யம் வழி மாபெ­ரும் தியான நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

சிங்­கப்­பூர் புத்திஸ்ட் மிஷன் என்னும் பெளத்த அமைப்பு முதல்­

மு­றை­யாக ஏற்­பாடு செய்த அந்த மெய்­நி­கர் நிகழ்­வில் இளை­ய­ரும் முதி­யோ­ரு­மாக 800க்கும் மேற்­பட்­டோர் 'ஸூம்' வழி­யாக இணைந்­த­னர்.

உல­கிலுள்ள எல்லா உயிர்­

க­ளுக்­கும் அன்­பும் கரு­ணை­யும் நிறைந்த சிந்­த­னை­க­ளைப் பரப்­பும் வகை­யில் மாபெ­ரும் தியான அமர்வு நடை­பெற்­றது.

இந்த தியா­னப் பிரார்த்­த­னை­யில் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­க­மும் கலந்­து­கொண்­டார்.

இணை­யம் வாயி­லாக விசாக தினக் கொண்­டாட்­டங்­கள் நடத்­தப்­பட்­டது வழி­பாட்­டின் சாராம்­சத்­தில் எவ்­வித மாற்­றத்­தை­யும் ஏற்

­ப­டுத்­த­வில்லை என்று அவர் கூறி­னார்.

"போற்­று­த­லுக்­கு­ரிய புத்­த­ரின் போத­னை­க­ளைப் பிர­தி­ப­லித்து நற்­கா­ரி­யங்­களில் ஈடு­ப­டு­வது, அமைதி, அன்பு, கருணை ஆகி­யவை தொடர்­பான சிந்­த­னை­க­ளைப் பரப்­பு­வது ஆகிய எது­வும் மாற­வில்லை," என்­றார் திரு சண்­மு­கம்.

புத்­த­ரின் பிறப்பை நினை­வு­

கூ­ரும் வகை­யில் கடைப்­பி­டிக்­கப்­படும் விசாக தின இணை­யம் வழி பிரார்த்­தனை நிகழ்­வுக்கு 15 வயது முதல் 35 வயது வரை­யி­லான இளை­யர்­கள் ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.

விசாக தின இசை நிகழ்ச்சி ஒன்­றும் இணை­யம் வழி அரங்­கே­றி­யது. சிங்­கப்­பூ­ரி­லும் வெளி­நா­டு

­க­ளி­லும் உள்ள பத்­துக்­கும் மேற்­பட்ட பௌத்த இசை­ய­மைப்­பா­ளர்­கள் அத­னைப் படைத்­த­னர்.

ஒரு மீட்­டர் இடை­வெளி விட்டு தியா­னம் செய்­வ­தைக் குறிக்­கும் வகை­யில் நிகழ்­வின் கருப்­பொ­ருள் அமைந்­தி­ருந்­தது. கொள்­ளை­நோய் பர­வ­லிலிருந்து தற்­காக்க இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் விசாக தினக் கொண்­ டாட்­டங்­கள் இரண்­டாம் ஆண்­டாக நடை­பெற்­றன.

மேலும், சிங்­கப்­பூர் முழு­வ­தும் உள்ள பௌத்த ஆல­யங்­களும் விசாக தின வழி­பாட்டு நிகழ்­வு­களை இணை­யம் வழி நேர­லை­யா­கக் காண்­பிக்க ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

ஒரே நேரத்­தில் ஆயி­ரக்­க­ணக் ­கா­னோர் ஒன்­று­கூ­டிப் பிரார்த்­திப்

­ப­தைத் தவிர்க்க கடந்த ஆண்டும் இவ்­வாறு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஆண்டு 'சர்­கிட் பிரேக்­கர்' என்­னும் கொள்­ளை­நோய் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­போது விசாக தினம் வந்­த­தால் கட்­டுப்­பா­டு­கள் இப்­போ­தைக் காட்­டி­லும் கடு­மை­யாக இருந்­தன.

இவ்­வாண்டு அவ்­வா­றில்­லா­மல் பௌத்த ஆல­யங்­கள் வழி­பாட்­டுக்­கா­கத் திறந்­தி­ருந்­தன.

ரிவர் வேலி­யில் உள்ள சிங்­கப்­பூர் புத்­திஸ்ட் லாட்ஜ் ஆல­யம் நேற்று பிற்­ப­கல் 12.30 மணிக்­குப் பிறகு வழி­பாட்­டுக்­குத் திறக்­கப்­பட்­டது. முன்­ன­தாக, பௌத்த பிக்­கு­கள் வழி­ந­டத்­திய விசாக தின வழிபாட்டு சடங்­கு­கள் அங்கு நடை­பெற்­றன.

அதே நேரம் இதர பௌத்த ஆல­யங்­கள் இணை­யம் வழி முன்­

ப­திவு செய்த பக்­தர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கின. அதி­க­பட்­சம் 50 பேர் வரை அதன் மூலம் அனு மதிக்கப்பட்டனர்.

பௌத்த சம­யம் சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரி­யது. ஒரு மில்­லி­ய­னுக்கு மேற்­பட்­டோர் பெளத்த போத­னை

­க­ளைப் பின்­பற்­று­கி­றார்­கள்.