விசாக தினத்தையொட்டி பிரதமர் லீ சியன் லூங் தமது வாழ்த்துகளை பௌத்த சமயத் தினர் அனைவருக்கும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
விசாக தின வழிபாட்டுக்காக இவ்வாண்டு பௌத்த ஆலயங்கள் திறக்கப்பட்டு இருப்பதைத் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்ட அவர், பாதுகாப்புக்காக கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதையும் சுட்டினார்.
"ஆலயத்திற்கு நேரடியாக உங்களால் செல்ல முடியாவிட்டாலும், பௌத்தம் கற்பிக்கும் நல்லொழுக்கங்களான கருணை, பொறுமை, தாராள
குணம், இரக்கம் போன்றவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பீர்கள் என்று கருதுகிறேன்.
"இதுபோன்ற பல அம்சங் கள் இப்போதைய உலகத் திற்குத் தேவைப்படுகின்றன, குறிப்பாக, இந்த கொள்ளைநோய் காலத்தில்," என்று
பிரதமர் தெரிவித்துள்ளார்.

