செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f72b3e11-a624-4981-83ce-b638f7df3bd9
-

வீட்­டிற்கு வெளியே விளை­யா­டிய பிள்­ளை­கள்; கைதான தாயார்

போதைப்­பொ­ருள் தொடர்­பான வேட்­டை­யின்­போது செங்­காங் கில் உள்ள ஒரு வீட்­டில் 31 வயது மாது ஒரு­வர் நேற்று முன்­தி­னம் கைது செய்­யப்­பட்­டார். ஃபெர்ன்­வேல் ரோட்­டில் உள்ள அந்த வீட்­டில் 45 வயது ஆட­வர் ஒரு­வ­ரும் கைதா னார். இரு­வ­ரும் சிங்­கப்­பூ­ரர்­கள். அங்கு நடத்­தப்­பட்ட சோத­னை­யில் 10 கிலோவுக்கும் அதி­க­மான போதைப் பொருள்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. இவற்­றின் மதிப்பு கிட்­டத்தட்ட $944,000. போதைப்­பொ­ருள்­களில் ஆக அதி­க­மாக 5.6 கிலோ எடை­யுள்ள ஹெரா­யின் சிக்­கி­யது. இது ஹெரா­யின் புழங்­கக்­கூ­டிய சுமார் 2,700 பேருக்கு ஒரு வார காலத்­திற்­குப் போது­மான அளவு. பெண்­ணைக் கைது செய்­தபோது அவ­ரது இரு குழந்­தை­களும் அரு­கில் விளை­யா­டிக்கொண்டு இருந்­தன. 11 வயது சிறு­வ­னும் 10 வயது சிறு­மி­யும் பின்னர் அவர்­க­ளின் உற­வி­ன­ரின் பரா­ம­ரிப்­பில் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர். முன்­ன­தாக, அவ்­விரு குழந்­தை­க­ளின் நல்­வாழ்வை உறுதி செய்­யும் நோக்­கில் அதற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­ட­தாக மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு (சிஎன்பி) கூறியது.

"போதைப்­பொ­ருள் தொடர்­பான இது­போன்ற பல சம்­ப­வங்­களில் குழந்­தை­கள் துர­தி­ருஷ்­ட­வ­ச­மா­கப் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள். போதைப்­பொ­ருள் கடத்­தி­கள் தங்­க­ளது சுய­ந­ல­மான, தீங்கு விளைக்­கக்­கூ­டிய செயல்­கள் மூலம் மற்­ற­வர்­ க­ளின் வாழ்வை அழிப்­ப­தோடு தங்­க­ளது சொந்­தக் குடும்­பத்­தி­ன­ருக்­கும் குழந்­தை­க­ளுக்­கும் துன்­பத்­தைத் தரு­கின்­ற­னர்," என சிஎன்­பி­ அதிகாரி செபாஸ்­டி­யன் டான் கூறி­னார்.

இன்னல் களைவதில் இளையர் உதவ முடியும்: ஆல்வின் டான்

எதிர்­கா­லத்­தில் வலு­வான குடும்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­குத் தேவையான வளங்­களை அளித்து, குடும்ப ஆலோ­ச­னை­களில் இளை­ய­ருக்கு முக்­கிய இடம் தரவேண்­டும் என

கலா­சார, சமூக, இளை­யர்துறை துணை அமைச்­சர்

ஆல்­வின் டான் தெரி­வித்­துள்­ளார். குறிப்­பாக, தற்­போ­தைய கொவிட்-19 சூழ­லில் குடும்­பங்­களை இன்­னல்­க­ளி­லி­ருந்து காப்­பாற்ற உத­வு­வ­தோடு தலை­மு­றை­க­ளுக்கு இடை­யி­லான பிணைப்­பு­களை வலுப்­ப­டுத்­து­வ­தி­லும் இளை­யர்­கள் முக்­கிய பங்­காற்ற முடி­யும் என்­றார் அவர். ஃபேம்சேம்ப்ஸ் என்­னும் சமூக இளை­யர் இயக்­கம் நடத்­திய மாநாட்­டில் அவர் இக் கருத்தை வெளியிட்டார்.