கொரோனா பரிசோதனை முடிவு தாமதமாகலாம்

கொரோனா பரிசோதனை முடிவு தாமதமாகலாம்

2 mins read
759dc233-cb5d-4858-a2a6-7fb34c54dbc1
பார்க்வே ஆய்வகங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் வந்ததைப் போல இருமடங்கு எச்சில்/சளி மாதிரிகள் கடந்த இரு வாரங்களாக ஒவ்வொரு நாளும் சராசரியாக பரிசோதனைக்கு வருகின்றன. படம்: பார்க்வே ஆய்வகங்கள் -

கொவிட்-19 தொற்று உள்­ளதா என்­பதை அறி­வ­தற்­காக எச்­சில்/சளி மாதிரி பரி­சோ­தனை செய்­து­கொண்­டோர், பரி­சோ­தனை முடிவு­களைப் பெறு­வது 24 மணி நேரத்­திற்­கு­மேல் தாம­த­மா­கக்­கூ­டும்.

ஆய்­வ­கங்­க­ளுக்கு அன்­றா­டம் பரி­சோ­த­னைக்கு வரும் மாதி­ரி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­உள்ளதே இதற்­குக் கார­ணம் என்று 'பார்க்வே ஆய்­வ­கங்­கள்' தலைமை நிர்­வாகி டாக்­டர் டேனி­யல் டான் தெரி­வித்து இருக்­கி­றார்.

கடந்த இரு வாரங்­களில் நாளொன்­றுக்­குச் சரா­ச­ரி­யாக, சென்ற மாதத்­தில் வந்­த­தைப் போல் இரு­ம­டங்கு மாதி­ரி­கள் பரி­சோ­த­னைக்கு வரு­வ­தாக டாக்­டர் டான் குறிப்­பிட்­டார்.

எச்­சில்/சளி மாதி­ரி­க­ளைப் பரி­சோ­திக்­கும் இயந்­தி­ரங்­கள் முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வதா­க­வும் ஆய்­வ­கத் தொழில்­நுட்­பர்­கள் கடந்த இரு வாரங்­க­ளாக ஒவ்­வொரு நாளும் 16 முதல் 18 மணி நேரம் வேலை செய்­வ­தா­க­வும் அவர் கூறி­னார். ஒரு சிலர் தங்­க­ளது ஓய்வு நாள்­க­ளி­லும் தாமாக முன்­வந்து வேலை செய்­வதாக அவர் சொன்­னார்.

"2017இல் நான் இங்கு வேலைக்­குச் சேர்ந்­த­தில் இருந்து, இதுவே பர­ப­ரப்­பான கால­கட்­ட­மாக இருந்து வரு­கிறது," என்­றார் டாக்­டர் டான்.

பார்க்வே பன்­தாய் குழு­மத்­தின்­கீழ் இயங்­கும் பார்க்வே ஆய்­வ­கங்­கள், இப்­போ­தைக்கு 200 பொது மருந்­த­கங்­கள், நான்கு 'ஐஎச்­எச் ஹெல்த்­கேர்' மருத்­து­வ­ம­னை­கள், சில தாதிமை இல்­லங்­கள், சிறைச்­சா­லை­கள், வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­கள் ஆகி­ய­வற்­றில் இருந்து வரும் எச்­சில்/சளி மாதிரி­களைப் பரி­சோ­தனை செய்­கிறது.

சமூ­கப் பர­வ­லைத் தடுக்­கும் வித­மாக, பல்­வேறு இடங்­க­ளி­லும் அதி­க­ள­வில் எச்­சில்/சளி மாதி­ரி­கள் சேக­ரிக்­கப்­பட்டு, பரி­சோ­திக்­கப்­பட்டு வரு­கின்­றன.

'இன்­னோ­கு­வெஸ் டயக்­னாஸ்­டிக்ஸ்' போன்ற தன்­னிச்­சை­யான ஆய்­வ­கங்­க­ளி­லும் பரி­சோ­தனை மாதி­ரி­கள் வந்து குவி­கின்­றன. மிக அவ­ச­ர­மான சம்­ப­வங்­க­ளில்­கூட பரி­சோ­தனை முடி­வு­கள் தாம­த­மா­கின்­றன.

இம்­மா­தம் 17ஆம் தேதி­யில் இருந்து நாளொன்­றுக்­குச் சரா­ச­ரி­யாக 15,000 முதல் 20,000 மாதி­ரி­கள் அங்கு வரு­கின்­றன. கடந்த ஏப்­ர­லில் இந்த எண்­ணிக்கை 5,000 முதல் 7,000ஆக இருந்­தது.

ஐந்­நூற்­றுக்­கும் அதி­க­மான பொது மருந்­த­கங்­கள், ஒரு சில தனி­யார், பொது மருந்­த­கங்­கள் மற்­றும் எச்­சில்/சளி மாதிரி சேக­ரிப்­புத் தளங்­களில் இருந்து வரும் மாதி­ரி­களை அந்த ஆய்­வ­கம் பரி­சோ­தனை செய்­து வருகிறது.

அதி­க­ரித்­துள்ள பணிச்­சு­மை­யால், மருத்­து­வ­ரீ­தி­யாக அவ­ச­ர­மான சம்­ப­வங்­க­ளுக்­கான பரி­சோ­தனை முடி­வு­கள் ஆறு முதல் 12 மணி நேரம் வரை தாம­த­ம­டை­ய­லாம் என்று 'இன்­னோ­கு­வெஸ் டயக்­னாஸ்­டிக்ஸ்' தலைமை நிர்­வாகி கினி ஃபூ கூறி­னார்.

பணிச்­சுமை அதி­க­ரிப்­பைச் சமா­ளிக்­கும் வித­மாக அதிக இயந்­திரங்­களை வாங்­கு­தல், கூடு­தல் பணி­யா­ளர்­களை நிய­மித்தல் என ஆய்­வ­கங்­கள் துரி­த­மா­கச் செயல்­பட்டு வரு­கின்­றன.

கொரோனா பர­வத் தொடங்­கி­ய­தில் இருந்து வாரம் ஏழு நாள்­களும் 24 மணி நேர­மும் பார்க்வே ஆய்­வகங்­கள் செயல்­பட்டு வரு­வ­தா­கக் கூறிய டாக்­டர் டான், எல்லா நேரங்­க­ளி­லும் முழுக் கொள்­ள­ளவு பணி­யா­ளர்­க­ளு­டன் இயங்­கும் வகை­யில் மனிதவளத்தை அதி­கப்­படுத்தியிருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

அதே­போல, 'இன்­னோ­கு­வெஸ் டயக்­னாஸ்­டிக்ஸ்' ஆய்­வ­கத்­தி­லும் ஊழி­யர் எண்­ணிக்­கையை அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் கூடு­தல் பகுப்­பாய்­வுக் கரு­வி­களை வாங்­கப் பரி­சீ­லித்து வரு­வ­தா­க­வும் திரு­வாட்டி ஃபூ சொன்­னார்.