சமூகத்தில் 14 பேர், விடுதிவாசி ஒருவருக்குக் கிருமித்தொற்று

சமூகத்தில் 14 பேர், விடுதிவாசி ஒருவருக்குக் கிருமித்தொற்று

1 mins read
41d82b8d-b3a6-42c9-b99f-f72d8137d082
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 24 பேருக்கு கொவிட்-19 உறு­தி­செய்­யப்­பட, மொத்த பாதிப்பு 61,940ஆக உயர்ந்­து­விட்­டது.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டோ­ரில் 14 பேர் சமூ­கத்­தில் இருப்­போர்; ஒரு­வர் விடு­தி­யில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்.

எஞ்­சிய ஒன்­பது பேரும் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­தோர். அவர்­களில் எழு­வர், நாடு திரும்­பிய சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள்.

நேற்று முன்­தி­னம் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் சுவா சூ காங்­கி­லுள்ள கன்­கார்டு தொடக்­கப் பள்ளி மாண­வர்­கள் இரு­வ­ரும் 'கிரேஸ் அசெம்­பிளி ஆஃப் காட்' தேவா­ல­யப் பாதி­ரி­யார் ஒரு­வ­ரும் அடங்­கு­வர்.

வெஸ்ட்­வுட் உயர்­நி­லைப் பள்ளி­யில் படிக்­கும், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 15 வயது மாண­வர் ஒரு­வ­ருக்­கும் வேறு இரு பாதிப்பு­களுக்­கும் தொடர்பு இருந்­தது கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து, புதிய கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் உரு­வாகி இருக்­கிறது. அம்­மா­ண­வ­ருக்­குக் கடந்த திங்­கட்­கி­ழமை கொரோனா பாதிப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

மேலும் 31 பேர் தொற்­றில் இருந்து மீண்­டதை அடுத்து, நேற்று முன்­தி­னம் வரை மொத்­தம் 61,345 பேர் அதி­லி­ருந்து முழு­மை­யா­கத் தேறி­விட்­ட­னர்.

தேவா­ல­யத்­தில் தூய்­மைப் பணி­கள்

இத­னி­டையே, 'கிரேஸ் அசெம்­பிளி ஆஃப் காட்' தேவா­லய வளா­கத்­தில் உள்ள இரு பாலர் பள்­ளி­கள் தொடர்ந்து திறந்­தி­ருக்­கும் எனத் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது. தேவா­ல­யப் பாதி­ரி­யார் ஒரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ள­போதும் அவர் அப்­பள்­ளி­க­ளு­டன் தொடர்­பில் இருக்­க­வில்லை எனக் கூறப்­பட்­டது.

இருப்­பி­னும், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக தேவா­லய வளா­கம் முழு­வ­தை­யும் சுத்­தம் செய்து, கிரு­மி­நா­சினி தெளிக்க ஏற்­பா­டு­கள் செய்யப்பட்டு வரு­கின்­றன.