நீர்த்தேக்கங்களைக் கண்காணிக்கும் வானூர்திகள்

நீர்த்தேக்கங்களைக் கண்காணிக்கும் வானூர்திகள்

2 mins read
ea2964d9-4401-41c0-b234-0dc647453364
மரினா நீர்த்தேக்கம் அருகில் பறந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் ஆளில்லா வானூர்தி. படம்: பொதுப் பயனீட்டுக் கழகம் -

சிங்­கப்­பூ­ரில் உள்ள ஆறு நீர்த்­தேக்­கங்­க­ளைக் கண்­கா­ணிக்க ஆளில்லா வானூர்­தி­கள் பயன்

­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தனது அன்­றாட நட­

வ­டிக்­கை­களில் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்த பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் எடுக்­கும் முயற்­சி­களில் இது­வும் ஒன்று.

இம்­மா­த இறு­தி­யில் மெக்­ரிட்சி மற்­றும் மரினா நீர்த்­தேக்­கங்­களில் கண்­கா­ணிப்­புப் பணிக்­காக ஆளில்லா வானூர்தி பயன்­ப­டுத்­தப்­படும். அத­னைத் தொடர்ந்து இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் சிராங்­கூன், கிராஞ்சி, லோவர் சிலேத்­தார், லோவர் பியர்ஸ் ஆகிய நீர்த்­தேக்­கங்­க­ளி­ன் மேல் ஆளில்லா வானூர்­தி­கள் பறக்கவிடப்­படும்.

கண்­கா­ணிப்­புப் பணி­க­ளுக்­

கா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் இந்த ஆளில்லா வானூர்­தி­களில் உணர் கரு­வி­களும் கேம­ரா­வும் பொருத்­தப்­பட்­டி­ருக்­கும் என்று கழ­கம் கூறி­யது.

தண்­ணீ­ரின் தரத்­தைக் கண்­கா­ணிக்­க­வும் மீன்­பி­டித்­தல், படகு வலித்­தல் போன்ற நீர்­நிலை நட­

வ­டிக்­கை­க­ளைக் கண்­கா­ணிக்­க­வும் இந்த அம்­சங்­கள் உத­வும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நீர்த்­தேக்­கங்­களின் அளவு, அங்கு நடை­பெ­றும் நீர்­நிலை நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆறு நீர்த்­தேக்­கங்­கள் தேர்வு செய்­யப்­பட்­ட­தாக கழ­கத்­தின் செய்­தி­

தொ­டர்­பா­ளர் தெரி­வித்­தார்.

தற்­போது, இந்த நீர்த்­தேக்­கங்­களில் கழ­கத்­தின் அதி­கா­ரி­கள் நேரில் சென்று கண்­கா­ணிப்­புப் பணி­களில் ஈடு­ப­டு­கின்­ற­னர். நீர்த் தாவ­ரங்­கள் அள­வுக்கு அதி­க­மாக வளர்ந்­தி­ருக்­கின்­ற­னவா என்­பதை அவர்­கள் நேரில் சென்று பார்த்து அதற்­குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வ­தாக

கழ­கம் கூறி­யது. அது­மட்­டு­மல்­லாது, நீர்­நிலை நட­வ­டிக்­கை­கள் பாது­காப்­பான முறை­யில் நடை­

பெ­று­கின்­ற­னவா என்­பதையும் அவர்­கள் கண்­கா­ணித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இந்த ஆறு நீர்த்தேக்கங்களுக்கும் அதிகாரிகள் நேரில் சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட ஓர் ஆண்டுக்கு 7,200 மணி நேரம் செலவழிக்கப்படுவதாக கழகம் கூறியது.

கண்­கா­ணிப்­புப் பணி­க­ளுக்கு ஆளில்லா வானூர்­தி­க­ளைப் பயன்­

ப­டுத்­தி­னால் ஓர் ஆண்­டுக்கு 5,000 மணி நேரத்தை மிச்­சப்­ப­டுத்­த­லாம் என்று அது நம்­பு­கிறது.

"கண்­கா­ணிப்­புப் பணி­களில் ஆளில்லா வானூர்­தி­க­ளைப் பயன்­

ப­டுத்­து­வ­தன் மூலம் நீர்த்­தேக்­கங்­களின் நுழை­வா­யில்­கள், நீரேற்று இயந்­தி­ரம் (பம்ப்), தடுக்­கி­தழ் (வால்வ்) ஆகி­ய­வற்­றுக்­கான பரா­ம­ரிப்­புப் பணி­கள் போன்ற முக்­கிய வேலை­களில் அதி­கா­ரி­கள் கவ­னம் செலுத்­த­லாம். அது­மட்­டு­மல்­லாது, பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தற்கு முன்பு ஆளில்லா வானூர்­தி­கள் எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பும்," என்று பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் நீர்ப்­பி­டிப்பு, நீர்­நி­லைப் பிரி­வின் இயக்­கு­நர் திரு இயோ கெங் சூன் தெரி­வித்­தார்.

ஆளில்லா வானூர்­தி­க­ளைப் பயன்­ப­டுத்தி கடந்த ஆண்டு

சோத­னை­முறை கண்­கா­ணிப்­புப் பணி­கள் நடத்­தப்­பட்­டன. எஸ்டி இஞ்­சி­னி­ய­ரிங் உரு­வாக்­கிய மென்­பொ­ரு­ளைக் கொண்டு இந்த ஆளில்லா வானூர்­தி­கள் இயக்­கப்­

ப­டு­கின்­றன.

தண்­ணீ­ரின் தரத்­தைப் பகுப்­பாய்வு செய்­ய­வும், அனு­மதி வழங்­கப்­படாத இடங்­களில் மீன்­பி­டிப்­

ப­வர்­க­ளைக் கண்­டு­பி­டிக்­க­வும் இந்த மென்­பொ­ருள் உத­வு­கிறது. பிரச்­சி­னை­கள் எழுந்­தால் டெலி­

கி­ராம் செயலி மூலம் அதி­கா­ரி­

க­ளின் கைபே­சி­க­ளுக்கு தக­வல் அனுப்­பி­வைக்­கப்­படும்.

பொது­மக்­க­ளுக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டி­ய­வற்றுக்கு எதி­ராக உட­ன­டி­ நட­வ­டிக்கை எடுக்க இந்த அணு­கு­முறை வழி­வகுக்கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.