சிங்கப்பூரின் சேவைத் துறை இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 1.5 விழுக்காடு சரிவைப் பதிவு செய்துள்ளது. இந்தத் தகவலை சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்டது.
கடந்த ஆண்டு இறுதிக் காலாண்டில் சேவைத் துறை சந்தித்த வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது இந்தச் சரிவு குறைவு. கடந்த ஆண்டு இறுதிக் காலாண்டில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் அத்துறை 7.6 விழுக்காடு சரிவைப் பதிவு செய்தது.
தகவல்-தொடர்பு, நிதி-காப்
புறுதி, கல்வி ஆகியவற்றைத் தவிர மற்ற சேவைத் துறைப் பிரிவுகள் ஆண்டுக்காண்டு அடிப்படையில் குறைவான வருமானம் ஈட்டியதாக புள்ளிவிவரத் துறை தெரிவித்தது.
மொத்த வர்த்தகம், சில்லறை வர்த்தகம், ஹோட்டல்கள், உணவுச் சேவைகள் ஆகியவை இதில் சேர்க்கப்படவில்லை. இவ்வாண்டின் முதல் காலாண்டில் காலாண்டுக்குக் காலாண்டு அடிப்படையில் ஒட்டுமொத்த வர்த்தகம் 0.6 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. நிர்வாகம் மற்றும் ஆதரவுச் சேவைகள் ஆண்டுக்காண்டு அடிப்படையில் ஆக மோசமாக 19.9 விழுக்காடு வருமான வீழ்ச்சியைக் கண்டது. கட்டுமானம் மற்றும் விமானப் போக்குவரத்துச் சாதனங்களின் தேவை குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பொழுதுபோக்கு மற்றும் தனிநபர் சேவைகள் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 18.8 விழுக்காடு சரிவைக் கண்டன. கொவிட்-19 நெருக்கடிநிலையால் ஏற்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக உல்லாசத் தளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொருளியல் நிபுணர்கள் கூறினர். அண்மையில் நடை
முறைப்படுத்தப்பட்டுள்ள விதி
முறைகள் சமூக ஒன்றுகூடல்களையும் பொழுதுபோக்கு நடவடிக்கை
களையும் கட்டுப்படுத்துவதால் சேவைத் துறை தொடர்ந்து பாதிக்கப்படும் என்று மேபேங்க் கிம் எங்கைச் சேர்ந்த மூத்த பொருளியல் நிபுணர் சுவா ஹாக் பின் தெரிவித்தார்.