ஈசூனில் உள்ள ஸ்ரீ மஹா
மாரியம்மன் கோயிலை நிர்வகிக்க இரண்டு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட சச்சரவு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தேவையற்றது என்று நேற்று தீர்ப்
பளித்த நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு நீதிமன்றத்துக்கே வந்திருக்கக்கூடாது என்று நீதிபதி சூ ஹான் டெக் தெரிவித்தார்.
ஒரு தரப்பில் கோயிலின் நிறுவனரும் நீண்டகாலத் தலைவராக இருந்தவருமான அமரர் திருவாட்டி கே. கல்யாணியின் சகோதரரான திரு சுப்பிரமணியம் கருப்பையா தேவர் இடம்பெற்றார்.
இன்னொரு தரப்பில் 2017ஆம் ஆண்டில் திருவாட்டி கல்யாணியின் மறைவுக்குப் பிறகு கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட நால்வர் இடம்பெற்றனர்.
2017ஆம் ஆண்டில் முறையற்ற வகையில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அதிருப்திக் குரல்கள் எழுந்ததை அடுத்து சர்ச்சை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோயில் உறுப்பினர்கள் சிலர் அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திரு சுப்பிர
மணியம் ஒருதலைப்பட்சமாக
அவசரநிலை பொதுக் கூட்டத்தை
கூட்டினார்.
நிர்வாகக் குழுவில் இருந்த 11 பேரைப் பதவி நீக்கம் செய்து திரு சுப்பிரமணியத்தைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து, புதிய நிர்வாகக் குழுவைத் தேர்வு செய்ய அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 40 பேர் வாக்களித்தனர்.
2019ஆம் ஆண்டு மே மாதத்தில் நான்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக திரு
சுப்பிரமணியம் வழக்கு தொடுத்தார்.
அவர்களில் முன்னாள் கோயில் தலைவரான என். ஆனந்தராஜாவும் தற்போதைய தலைவரான ஆர். மகேந்திரனும் அடங்குவர்.
கோயிலுக்குச் சொந்தமான ஆவணங்களையும் சொத்துகளையும் தம்மிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்திடம் திரு சுப்பிரமணியம்
கேட்டுக்கொண்டார்.
கோயில் நிர்வாக உறுப்பினர்கள் பட்டியல் தொடர்பாகவும் சர்ச்சை ஏற்பட்டது.
திரு சுப்பிரமணியம் வைத்திருந்த பட்டியலில் நான்கு ஆயுட்கால உறுப்பினர்களும் 108 சாதாரண உறுப்பினர்களும் இடம்பெற்றனர்.
மாறாக, பிரதிவாதிகள் வைத்திருந்த பட்டியலில் 96 உறுப்பி னர்கள் இடம்பெற்றனர்.
2018ஆம் ஆண்டில் நிர்வாகக் குழுவின் ஒப்புதலின்றி முறையற்ற வகையில் அவசரநிலை பொதுக் கூட்டம் நடத்தப்பட்டதாக நீதிபதி கூறினார்.
விதிமுறைப்படி இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை நடத்தப்படும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நிர்வாகக் குழு தேர்வு செய்யப்படும்.
"நிர்வாகக் குழுவை நீக்க கோயில் உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி ஒருதலைப்பட்சமாக அவசரநிலை பொதுக் கூட்டத்தை நடத்த முடியாது. புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்க அவர்கள் அடுத்த தேர்தலுக்குக் காத்திருக்க வேண்டும்," என்றார் நீதிபதி சூ.
பட்டியல்களை உறுதிசெய்த வர்களை சாட்சிகளாக அழைக்
காததால் சட்டபூர்வ உறுப்பினர் யார் என்பதை இரு தரப்பினராலும் நிரூபிக்க முடியாது என்றார் அவர்.
2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் திரு சுப்பிரமணியம் போட்டியிட்டிருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரத்துக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்றார் நீதிபதி.
அடுத்த வருடாந்திர பொதுக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதால் இந்த வழக்கு தேவையற்றது என்று சம்பந்தப்பட்டவர்
களின் வழக்கறிஞர்களிடம் கடந்த மார்ச் மாதம் 8ஆம், ஏப்ரல் 20ஆம் தேதிகளில் தெரிவித்திருந்ததாக நீதிபதி கூறினார்.
ஆனால் வழக்கு தொடர
தங்கள் கட்சிக்காரர்கள் விரும்புவதாக வழக்கறிஞர்கள் கூறியதை நீதிபதி சுட்டினார்.
இந்த வழக்கு தேவையற்றது என்று நேற்று மீண்டும் வலியுறுத்திய நீதிபதி சூ, எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சினை ஏற்படாமல் இருக்க அடுத்த மாதம் நடை
பெறும் தேர்தல் முறையாக நடத்தப்படுவதை இரு தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

