பெண் இஸ்லாமிய சமய ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக்கு நாடாளுமன்ற உறுப்
பினர்களும் இஸ்லாமிய சமய ஆசிரியர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெண் இஸ்லாமிய சமய ஆசிரியர்கள் சிலரைப் பட்டியலிட்டு பாலியல் ரீதியிலான ஈர்ப்பை
முன்னிலைப்படுத்தி அவர்களைத் தரவரிசைப்படுத்த பொது
மக்களைக் ஆய்வு கேட்டுக்கொண்டது. பட்டியலில் குறைந்தது 12 பெண் இஸ்லாமிய சமய ஆசிரியர்கள் தரவரிசைப்படுத்தப்
பட்டிருந்ததாகவும் ஆய்வில் 1,005 பேர் பங்கெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வைப் பற்றி இன்ஸ்டகிராம் பதிவு மூலம் உஸ்தாஸ் முகம்மது ஸாஹிட் முகம்மது ஸின் நேற்று முன்
தினம் அதிருப்தி தெரிவித்தார்.
"இந்த ஆய்வின் காரணமாகப் பெண் இஸ்லாமிய சமய ஆசிரியர் ஒருவர் மனவுளைச்சல் அடைந்து என்னுடன் தொடர்புகொண்டு விவரம் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். செயலியில் பட்டி
யலிடப்பட்டுள்ள அனைவரும் உள்ளூர் பெண் இஸ்லாமிய சமய ஆசிரியர்கள். இந்த முறையற்ற செயலுக்குக் காரணமானவரை அடையாளம் கண்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் உஸ்தாஸ் ஸாஹிட். இதற்கிடையே, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தில் (முயிஸ்) உள்ள முஃப்தி அலு
வலகத்தின் துணை இயக்குநரான உஸ்தாஸ் இர்வான் ஹாடியும் ஆய்வுக்கு எதிராக தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆய்வுக்குக் காரணமானவர்கள் சட்டப்படி கடுமையாக
தண்டிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
உஸ்தாஸ் இர்வானின் பதிவு குறித்து கருத்து தெரிவித்த சுவா சூ காங் குழுத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கார்னைன் அப்துல் ரஹீம், ஆய்வை நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
"எங்கள் பெண்கள், இஸ்லாமிய சமயக் கல்வி ஆசிரியர்
களுக்கு எதிரான இந்த ஆய்வு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆய்வை நடத்தியவருக்கும் ஆய்வில் பங்கெடுத்தவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் அவர். பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் முறையற்ற செயல்களை எதிர்க்கும்படி சுகாதார அமைச்சு மற்றும் தொடர்பு, தகவல் அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் தமது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாகப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். பெண்கள் மட்டுமல்லாது, ஆண்களையும் அவமதிப்பது தவறு என்பதை இளையர்களுக்குப் புரிய வைப்பது அவசியம் என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டார். பெண்களை சமூகம் தொடர்ந்து அவமதித்தாலும் அவர்களைப் போகப் பொருளாகக் கருதினாலும் பெண்கள் முன்னேற்றத்துக்கான அனைத்து முயற்சிகளுக்கும் அர்த்தமில்லாமல் போய்விடும் என்று மக்கள் செயல் கட்சியின் மகளிர் அணியின் ஆலோசகருமான திருவாட்டி ரஹாயு கூறினார்.
"சிங்கப்பூரில் அனைவரும் இவ்வாறு பெண்களுக்கு எதிராக நடந்துகொள்வதில்லை என நான் நம்புகிறேன். ஆனால் பெண்கள் பற்றி சிலர் தெரிவிக்கும் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளன. பெண்களை அவமதிக்கும் இத்தகைய செயல்
களுக்கு எதிராக நமது சமூகத்தினர், குறிப்பாக ஆண்கள் கண்டனம் தெரிவிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இருப்பினும், பெண்களை மதிக்க வேண்டும் என்று நமது சமூகத்துக்குத் தொர்டந்து கற்றுக்கொடுக்க வேண்டும்," என்றார் திருவாட்டி ரஹாயு.
இந்த ஆய்வை நடத்தியவர்
களையும் அதில் பங்கெடுத்தவர்
களையும் அதிபர் ஹலிமா யாக்கோப் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

