சிங்கப்பூரில் இரவு நேர கேளிக்கை விடுதிகள் விரைவில் மீண்டும் செயல்படக்கூடிய சூழல் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், சூழ்நிலை மேம்பட்டதும் அந்தத் துறைக்கான முன்னோடித் திட்டங்களை மீண்டும் இடம்பெறச் செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று செய்தியாளர்களை மெய்நிகர் கூட்டத்தில் சந்தித்தபோது கொஞ்ச காலமாகவே இந்தத் துறை பாதிக்கப்பட்டு வந்திருப்பதைச் சுட்டினார். என்றாலும் இப்போதைக்குச் சாத்தியம் இல்லை என்றாலும் இத்துறையில் முன்னோடி திட்டங் களை அமலாக்க வாய்ப்பு உண்டு என்று அமைச்சர் தெரிவித்தார்.

