திருத்த உத்தரவை ரத்து செய்ய கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு

திருத்த உத்தரவை ரத்து செய்ய கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு

4 mins read
616c7bdf-a6fd-4acb-86f3-26bedec3e08e
மூதாட்டிக்கு போலிஸ் ஆய்வாளர் ஹெஃப் லிம் கொக் ஹுவீ உதவி செய்ததே உண்மை என்று காணொளி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை -

பொஃப்மா எனப்­படும் இணை­யம்­வழி பொய்ச்­செய்­திக்­கும் சூழ்ச்­சித் திறத்­துக்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ், தி ஆன்­லைன் சிட்­டி­சன் ஏஷி­யா­வால் இணை­யத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்ட செய்­திக்­குத் திருத்­தம் போட உத்­த­ர­வி­டப்­பட்­டது. இந்த உத்­த­ரவை ரத்து செய்­யக் கோரி தி ஆன்­லைன் சிட்­டி­சன் ஏஷியா விண்­ணப்­பம் செய்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், அந்த விண்­ணப்­பத்தை உள்­துறை அமைச்சர்

கா. சண்முகம் நிரா­க­ரித்துள்ளார்.

இம்­மா­தம் 18ஆம் தேதி­யன்று இணை­யத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்ட அந்­தக் காணொளி பொய்ச் செய்­தி­யைப் பரப்­பி­ய­தாக அமைச்சு கூறி­யது.

ஈசூன் வட்­டா­ரத்­தில் முகக்­

க­வ­சம் அணி­யாத மூதாட்­டி­யி­டம் போலிஸ் அதி­கா­ரி­கள் மிகக்

கடு­மை­யாக நடந்­து­கொண்­ட­தாக அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அது உண்­மை­யல்ல என்று அமைச்சு வலி­யு­றுத்­தி­யது.

பொய்ச்­செய்­தி­யு­டன் பதி­வேற்­றம் செய்­யப்­பட்ட இந்­தக் காணொளி குறித்து இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று போலி­சார் விளக்­கம் கேட்­ட­னர். தி ஆன்­லைன் சிட்­டி­சன் ஏஷி­யா­வின் பதி­வி­ல் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது போல நடக்­க­வில்லை என்­றும் சம்­பந்­தப்­பட்ட போலிஸ் அதி­காரி அரு­கில் இருந்த உண­வுக்­

க­டைக்­குச் சென்று அந்த மூதாட்­டிக்கு உண­வு வாங்கி தந்­த­தாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் காட்­டும் காணொ­ளியை போலி­சார் வெளி­யிட்­ட­னர்.

போலிஸ் அதி­கா­ரி­யின் சீரு­டை­யில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கேம­ரா­வில் அந்­தக் காணொளி பதி­வா­னது. மூதாட்­டியை போலிஸ் அதி­காரி கண்­டிக்­க­வில்லை என்­பதை காணொ­ளிப் பதிவு நிரூ­பிப்­ப­தாக போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர்.

தி ஆன்­லைன் சிட்­டி­சன் ஏஷியா பதி­வேற்­றம் செய்த செய்­திக்கு எதி­ராக திருத்த உத்­த­ர­வைப் பிறப்­பிக்­கு­மாறு இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று பொஃப்மா அலு­வ­ல­கத்­துக்கு சட்ட, உள்­தறை அமைச்­சர்

கா. சண்­மு­கம் உத்­த­ர­விட்­டார்.

தி ஆன்­லைன் சிட்­டி­சன் ஏஷியா பதி­வேற்­றம் செய்த அந்­தச் செய்தி பொய்­யா­னது என்­ப­தில் சந்­தே­கம் இல்லை என்று குறிப்­பிட்ட உள்­தறை அமைச்சு, அதற்கு எதி­ராக திருத்த உத்­த­ர­வைப் பிறப்­பிப்­பது சரி­தான் என்று தெரி­வித்­தது.

திருத்த உத்­த­ரவை ரத்து செய்­யக்­கோரி சமர்ப்­பிக்­கப்­பட்ட விண்­ணப்­பத்தை மிகக் கவ­ன­மா­கப்

பரி­சீ­லனை செய்த பிறகு அதை நிரா­க­ரிக்க முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தாக உள்­தறை அமைச்சு கூறி­யது.

விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­

பட்­டி­ருப்­பதை தி ஆன்­லைன் சிட்­டி­சன் ஏஷி­யா­வுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­ருப்­ப­தா­க­வும் அமைச்சு கூறி­யது.

உண்மை வெளியானதில் மகிழ்ச்சி

இதற்­கி­டையே, உண்மை வெளிச்­சத்­துக்கு வந்­தது மகிழ்ச்­சி­யைத் தரு­வ­தாக இந்த விவ­ரா­கத்­தில் சம்­பந்­தப்­பட்ட 45 வயது போலிஸ் ஆய்­வா­ளர் ஜெஃப் லிம் கொக் ஹுவீ தெரி­வித்­தார்.

இவர் ஈசூன் சவுத் அக்­கம்­பக்க போலிஸ் நிலை­யத்­தின் துணைக் குழுத் தலை­வ­ரா­வார்.

மூதாட்டி ஒரு­வர் பொது இடத்­தில் முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை என்­றும் அவர் வழி தெரி­யா­மல் குழப்­பத்­தில் இருந்­த­தா­க­வும் இம்­மா­தம் 17ஆம் தேதி­யன்று போலி­சுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக

ஆய்­வா­ளர் லிம் தேரி­வித்­தார்.

அதை­ய­டுத்து சக அதி­கா­ரி­கள் மூவ­ரு­டன் மூதாட்டி இருந்த இடத்­துக்­குச் சென்­ற­தாக அவர் கூறி­னார்.

மூதாட்டி பதற்­றம் அடை­யா­மல் இருக்க அவ­ரு­டன் அமர்ந்து பேச முயன்­ற­தாக திரு லிம் தெரி­வித்­தார்.

"மூதாட்­டி­யி­டம் பேசி­ய­தில் அவர் தமது நண்­பர்­க­ளுக்­கா­கக் காத்­துக்­கொண்­டி­ருந்­தார் என்­பது தெரி­ய­வந்­தது. அவர் பசி­யு­டன் இருப்­பார் எனக் கருதி, சாப்­பிட ஏதா­வது வேண்­டுமா எனக் கேட்­டேன். அதற்கு அந்த மூதாட்டி, இரண்டு கோழித் துண்­டு­கள் வேண்­டும் என என்­னி­டம் கூறி­னார். இரண்டு கோழித் துண்­டு­களை வாங்கி அவ­ரி­டம் கொடுத்­தேன்," என்­றார் அவர்.

சொந்த செல­வில் அந்த மூதாட்­டிக்கு உணவு வாங்­கிக் கொடுத்­த­தா­கக் ஆய்­வா­ளர் லிம் கூறி­னார். அது­மட்­டு­மல்­லாது, அந்த மூதாட்­டியை வீட்­டுக்கு அனுப்ப முன்­வந்­த­தா­க­வும் ஆனால் மூதாட்டி

மறுத்­து­விட்­ட­தா­க­வும் திரு லிம் தெரி­வித்­தார்.

அவ­ரு­டன் பேசி­ய­தில் அந்த மூதாட்டி ஞாபக மறதி நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று தமக்­குத் தோன்­றி­ய­தாக ஆய்­வா­ளர் லிம் கூறி­னார். அந்த மூதாட்­டிக்கு அவ­ரது பெயர், வீட்டு முக­வரி ஞாப­கம் இல்லை என்­றார் அவர்.

அரு­கில் உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்­றில் அந்த மூதாட்டி வசிப்­

ப­தாக வழிப்­போக்­கர் ஒருவர் கூறி­ய­தாக திரு லிம் கூறி­னார்.

மூதாட்­டி­யின் வீட்­டைக் கண்­டு ­பி­டிக்க ஆய்­வா­ளர் லிம்­மு­டன் இருந்த இரண்டு போலிஸ் அதி­கா­ரி­கள் அந்­தக் கட்­ட­டத்­தில் வீடு வீடாக ஏறி, இறங்­கி­னர். சக அதி­காரி ஒரு­வ­ரு­டன் திரு லிம்

மூதாட்­டி­யு­டன் இருந்­தார்.

வீட்­டைக் கண்­டு­பி­டித்­த­தும் கீழே இறங்கி மூதாட்­டியை வீட்­டுக்கு அழைத்­துச் செல்­லு­மாறு மூதாட்­டி­யின் பணிப்­பெண்­ணி­டம் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

மூதாட்­டியை அழைத்­துச் செல்ல பணிப்­பெண் வந்­த­தும் வெளியே செல்­லும்­போது முக­க்க­வ­சம் அணிய வேண்­டும் என்று மூதாட்­டிக்கு நினை­வூட்­டி­ய­தாக ஆய்­வா­ளர் லிம் கூறி­னார்.

"நான் குரலை உயர்த்­திப் பேச­வில்லை," என்று தி ஆன்­லைன் சிட்டிசன் ஏஷியா முன்­வைத்த

குற்­றச்­சாட்­டு­களை அவர் மறுத்­தார்.

நடந்­தது திரித்­துக் கூறப்­பட்டு நானும் எனது சக அதி­கா­ரி­களும் எதிர்­ம­றை­யான கோணத்­தில்

காட்­டப்­ப­டு­வோம் என சிறி­துகூட எதிர்­பார்க்­க­வில்லை.

"எனக்கு அநி­யா­யம் இழைக்­கப்­பட்­ட­தாக நான் உணர்ந்­தேன். ஆனால் பொது­மக்­க­ளுக்கு உத­வ­வும் எங்­க­ளது கட­மை­யைச் செய்­ய­வும் இந்­தச் சம்­ப­வம் தடை­யாக இருக்­கக்­கூ­டாது," என்­றார் அவர்.