கொவிட்-19 கட்டுப்பாடு: பணிப்பெண்களுக்கு ஓய்வுநாளிலும் சம்பளமின்றி கூடுதல் வேலை

கொவிட்-19 கட்டுப்பாடு: பணிப்பெண்களுக்கு ஓய்வுநாளிலும் சம்பளமின்றி கூடுதல் வேலை

2 mins read
a9437f4d-4302-4e38-b7ad-d0208eae3eda
-

கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான புதிய கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்த பின், இங்­குள்ள இல்­லப் பணிப்­பெண்­கள் சிலர் ஓய்வு நாட்­களில் சம்­ப­ள­மில்­லா­மல் வீட்­டில் வேலை செய்ய கட்­டா­யப்­ப­டுத்­தப் படு­கின்­ற­னர்.

வரும் ஜூன் 13ஆம் தேதி வரை­யி­லான இரண்­டாம் கட்ட நட­வ­டிக்­கை­க­ளின்­போது, ஓய்வு நாட்­களில் வீட்­டில் இருக்­கும்­படி இல்­லப் பணிப்­பெண்­க­ளுக்கு மனி­த­வள அமைச்சு கடந்த வாரம் அறி­வு­றுத்­தி­யது. கிரு­மிப் பர­வ­லைத் தவிர்ப்­பதே அதன் நோக்­கம்.

ஓய்வு நாளில் பணி­யா­ளர்­கள் வீட்­டில் இருந்­தால் அவர்­க­ளுக்கு வேலை எதை­யும் தரக்­கூ­டாது. அல்­லது அவர்­கள் ஓய்­வு­நாளை விட்­டுக்­கொ­டுத்து வீட்­டில் வேலை செய்­தால், அதற்­கு­ரிய சம்­ப­ளத்தை முத­லா­ளி­கள் வழங்­க­வேண்­டும் என்­றது அமைச்சு.

புதிய கட்­டுப்­பா­டு­க­ளால் ஓய்வு நாளில் தன் முத­லாளி தன்னை வீட்­டில் இருக்­கும்­படி கேட்­டுக்­கொண்­ட­தா­கக் கூறிய இந்­தோ­னே­சி­யப் பணிப்­பெண் திரு­வாட்டி லுலுக், முத­லாளி தனக்கு கூடு­தல் வேலை­கள் சொன்­ன­தா­கச் கூறி­னார். அதற்­கு­ரிய ஊதி­யம் அவ­ருக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.

அவ­ரைப் போலவே பல பணிப்­பெண்­கள், நீண்ட நேரத்­துக்கு வேலை செய்­யும் கட்­டா­யம் ஏற்­ப­டு­வ­தா­க­வும் அதற்­கான ஊதி­யம் கிடைப்­ப­தில்லை என­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் கூறி­னர். அத்­து­டன் வீட்­டில் தான் அவர்­கள் வேலை என்­ப­தால் போதிய ஓய்வு கிடைப்­ப­தில்லை என்று சிலர் தெரி­வித்­த­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் பணிப்­பெண்­க­ளுக்­கும் உத­வும் ஹோம் அமைப்பு, பணிப்­பெண்­கள் சந்­திக்­கும் பிரச்­சினை குறித்து புதிய போக்­கு­கள் ஏதும் தென்­ப­ட­வில்லை என்று கூறி­யது.

ஆனால் ஒரு ஓய்வு நாள் என்­பதை 24 மணி­நே­ரம் என்று வரையறுக்க வேண்­டும் என்­றார் அமைப்­பின் நிர்­வாகி திரு­வாட்டி ஜெயா அனில் குமார்.

அது, இல்­லப் பணிப்­பெண்­களுக்கு ஓய்­வு­நா­ளில் வேலை சொல்­லக்­கூ­டாது என்­ப­தைப் பழக்­க­மாக்க உத­வும் என்­றார் அவர்.

பணிப்­பெண்­க­ளின் ஓய்­வு­நாளை மதித்து நடந்­து­கொள்­வது அவ­சி­யம் என்று இல்­லப் பணி­யா­ளர்­க­ளுக்­கான நிலை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் திரு ஷம்­ஷுல் கமார் முத­லா­ளி­க­ளுக்கு நினை­வூட்­டி­னார்.